இயக்குநரும் நடிகருமான சீமான் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் படம் இயக்கத் தயாராகி வருகிறார்.
கோபம் என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தை இயக்கும் சீமான், இதற்கான கதையை ஜி.வி. பிரகாஷிடம் கூறியுள்ளார். உடனே அவரும் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுப் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் குரல் கொடுத்து வருபவர் ஜி.வி. பிரகாஷ். இந்நிலையில் சீமான், ஜி.வி ஆகிய இருவரும் கைகோர்ப்பதால் தமிழ்நாட்டுப் பிரச்னைகளை உள்ளடக்கிய கதையாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2008-ல் வாழ்த்துகள் படத்தை இயக்கிய சீமான் அதன்பிறகு அரசியல் களத்தில் தீவிரமாகிவிட்டார். நீண்ட இடைவெளிக்குக்குப் பிறகு அவர் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்குகிறது.
இயக்குநர் வேலு பிரபாகரன் - நடிகை ஷெர்லி தாஸ் திருமணப் புகைப்படங்கள்!
அருள்நிதி நடிக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் பட டீசர்!
ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடினார் இளையராஜா
'பே வாட்ச்' படத்தை வெளியிட தடையில்லை: உயர்நீதிமன்றம்
டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரியை விலக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன்
கமலும் சூர்யாவும் மனது வைத்தால் விஜய் சேதுபதி படம் வெளிவரலாம்: இயக்குநர் சீனு ராமசாமி