கரண் ஜோஹர் தயாரிப்பில் மீண்டும் இணையும் பிரபாஸ் - ராஜமெளலி?

பிரபாஸை ஹிந்தியில் அறிமுகம் செய்ய கரண் ஜோஹர் ஆர்வமாக உள்ளார்...
கரண் ஜோஹர் தயாரிப்பில் மீண்டும் இணையும் பிரபாஸ் - ராஜமெளலி?

ஏற்கெனவே பாகுபலி படத்தில் இந்த மூவரும் கூட்டணி அமைத்தார்கள். பிரபாஸ் நடிப்பில் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் இரு பாகங்களையும் ஹிந்தி மொழியில் இந்தியா முழுக்க வெளியிட்டவர் கரண் ஜோஹர்.

இதையடுத்து மூவரும் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. கரண் ஜோஹர் தயாரிப்பில் பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்க ராஜமெளலி தயாராகி வருகிறார் என்கிறது தகவல்.

ராஜமெளலியின் நெருங்கிய வட்டாரம் இதுகுறித்து கூறியதாவது: பிரபாஸ் சாஹு படத்தில் தற்போது மும்முரமாக உள்ளார். அதற்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பிரபாஸை ஹிந்தியில் அறிமுகம் செய்ய கரண் ஜோஹர் ஆர்வமாக உள்ளார். எனவே அவருடைய தயாரிப்பில் இப்படம் உருவாகலாம். எல்லாமே பேச்சுவார்த்தை நிலைமையில்தான் உள்ளது. இறுதி வடிவம் பெற்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவர நாளாகும் என்று தகவல் தெரிவிக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com