உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட ‘மரகத நாணயம்’ இன்று ரிலீஸ்!

உண்மை சம்பவத்தை தழுவி ஒரு  கற்பனை என்று தான் சொல்ல வேண்டும்  'மரகத  நாணயம்’ 
உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட ‘மரகத நாணயம்’ இன்று ரிலீஸ்!

உண்மை சம்பவத்தை தழுவி ஒரு  கற்பனை என்று தான் சொல்ல வேண்டும்  'மரகத  நாணயம்’ படத்தை பற்றி இயக்குனர் சரண் பகிர்ந்து கொண்டார்.

'செய்தித் தாள் ஒன்றில் நான் படித்த சம்பவம் என்னை மிகவும் கவர்ந்தது. அதுவே மரகத நாயாயத்தின் தொடக்க புள்ளியாகும். பிறகு நான் அதில் சில சுவாரஸ்யமான சம்பவங்களை இணைத்தேன். இப்படம் பெரியவர்களுக்கு மட்டும் இன்றி குழந்தைகளையும் கவரும் என்பதில் உறுதியாக உள்ளேன். இப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவரது அர்ப்பணிப்பும் உழைப்பும் என்னை ஆச்சிரியப்படுத்தியது.

.இப்படத்தின் தூணாக இருந்தது எங்களது தயாரிப்பாளர் திரு.டில்லி பாபு அவர்கள்.அவர் கொடுத்த ஊக்கமும் சுதந்திரமும் வார்த்தையில் அடங்காதவை. இக்கதையில் சில சுவாரஸ்யமான மர்ம முடிச்சுகள் உள்ளன . அதில் நிக்கி கல்ராணி மற்றும் அருண்ராஜ் காமராஜின் கதாபாத்திரங்களும் அடங்கும் என்பது கூடுதல் தகவல்' என்று உற்சாகத்துடன் கூறினார்  புது முக இயக்குனர் ARK சரவண். இன்று படக்குழுவினர் மட்டுமல்ல ரசிகர்களும் திரையில் வெளிவரப்போகும் மரகத நாணயத்துக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com