பிரபல நடிகை ஜெயசுதாவின் கணவர் தற்கொலை! 

பிரபல நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் மும்பையில் கட்டிடமொன்றின் உச்சியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
பிரபல நடிகை ஜெயசுதாவின் கணவர் தற்கொலை! 

மும்பை: பிரபல நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் மும்பையில் கட்டிடமொன்றின் உச்சியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஜெயசுதா. நடிப்புத் துறையில் இருந்து விலக்கியவுடன் சிறிது காலம் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

இவர் இரண்டு வருட காதலுக்கு பிறகு திரைபடத் தயாரிப்பாளரும், பாலிவுட் நடிகர் ஜித்தேந்திராவின் ஒன்று விட்ட சகோதரருமான் நிதின்கபூரை 1985-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நிகர்  மற்றும் ஷ்ரேயன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நிதின் கபூர் மும்பையில் அடுக்கு மாடிக் கட்டிடமொன்றின் உச்சியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு காரணம் என்னவென்பது தெரியவில்லை.

ஆனால் நிதின் கபூர் கடுமையானமான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்கு மனோதத்துவ சிகிச்சை பெற்று வந்ததாகவும் ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com