இளையராஜா இசையமைத்த பாட்டுக்கு ராயல்டி கேட்கும் விஷயம் தொடர்பாக கேட்டபோது, தயாரிப்பாளர் மிஷ்கின் கூறியது:
இளையராஜாவின் ஒவ்வொரு பாட்டிலும் அவரது உழைப்பு மட்டுமே உள்ளது. அதற்காக அவர் ராயல்டி கேட்கிறார். குறிப்பாக, ஒரு தயாரிப்பாளர் எடுத்த படம் அடிக்கடி தொலைக்காட்சியில் ஓடுகிறது. அது ஓடும் சமயத்தில், அவருக்கு ராயல்டி கொடுத்திருந்தால் அவரது ஏழ்மை நிலை விலகி இருக்கும். ஆனால் தற்போதுதான் இதுபோன்ற காப்பிரைட் பிரச்னை எழுந்துள்ளது. இதன் முடிவு போக, போகத்தான் தெரியும் என்றார் அவர்.