தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை (மார்ச் 31) சென்னையில் நடைபெறுகிறது.
நடிகர் நாசர் தலைமையிலான நிர்வாகம் நடிகர் சங்கத்தின் பொறுப்பை ஏற்று வருகிறது. இந்நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பாக நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டடம் இருந்தது.
இதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நிதி திரட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்படுகிறது.
காலை 9 மணி முதல் 1 மணி வரை இந்த விழா நடைபெறுகிறது. இதற்காக ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று நாசர் தலைமையிலான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.