இந்திய திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் சண்டைக் கலைஞர் சங்கப் பொன் விழா

தென்னிந்திய திரைப்பட சண்டைக் கலைஞர்கள் சங்க பொன் விழாவையொட்டி இந்திய அளவில் திரை நட்சத்திரங்கள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசுகிறார் தென்னிந்திய திரைப்பட சண்டைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் அனல் அரசு.
செய்தியாளர்களிடம் பேசுகிறார் தென்னிந்திய திரைப்பட சண்டைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் அனல் அரசு.

தென்னிந்திய திரைப்பட சண்டைக் கலைஞர்கள் சங்க பொன் விழாவையொட்டி இந்திய அளவில் திரை நட்சத்திரங்கள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தென்னிந்திய திரைப்பட சண்டை கலைஞர்கள் சங்கத் தலைவர் அனல் அரசு செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
சினிமாத் துறையின் வெற்றிக்கும், உருவாக்கத்துக்கும் ஒவ்வொரு கலைஞனும் போராடி உழைத்துத்தான் வெள்ளித்திரை பிரகாசிக்கிறது. அனைவரும் கூட்டுக் குடும்பமாக உழைத்துத்தான் ஒரு படம் திரைக்கு வருகிறது.
அப்படி உயிரைக் கொடுத்தும், உடல் உறுப்புகளைக் கொடுத்தும் உழைக்கும் துறை எங்கள் சண்டை கலைஞர்கள் சங்கம். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் துவக்கி வைக்கப்பட்ட இந்த சங்கம், தற்போது பொன் விழா ஆண்டை தொட்டிருப்பதில் மகிழ்ச்சி.
ஆகஸ்ட் மாதம் விழா: இந்த சங்கத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் அனைவருக்கும் நன்றி. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி பொன்விழா கொண்டாடப்பட உள்ளது; அதில் பிரமாண்டமான கலை நிகழ்ச்சியை நடத்த உள்ளோம்.
சுமார் 6 மணி நேரம் வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் எங்கள் சங்கம் சார்ந்த மூத்த உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்த உள்ளோம். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மொழி நட்சத்திரங்களும் இந்தக் கலை விழாவில் பங்கேற்கவுள்ளனர். நடனம், விருதுகள், சண்டை கலைஞர்களின் சாகசம் என பல வித நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com