பாகுபலி 2, டங்கல் என இரு படங்களும் ரூ. 1500 கோடி வசூலைப் பெற்றுள்ளன. இதுகுறித்து பாகுபலி 2 தயாரிப்பாளர் ஷோபு ட்விட்டரில் கூறியதாவது:
ஒருமுறை நிகழ்ந்தது மீண்டும் நிகழாது. ஆனால் இருமுறை நிகழ்ந்தது எனில் நிச்சயம் மூன்றாவது முறையும் நிகழும். (அல்கமிஸ்ட்-லிருந்து). இரு படங்கள் அடுத்தடுத்து ரூ. 1500 கோடியை வசூல் செய்துள்ளன. இது புதிய வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. இது நம் துறைக்கு நல்ல பலன்களை அளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
சீனாவில் வெளியாவதற்கு முன்பு ரூ. 744 கோடி வசூலித்திருந்தது அமீர் கானின் டங்கல் படம். தற்போது சீன வெளியீட்டுக்குப் பிறகு டங்கல் படத்தின் வசூல் ரூ. 1500 கோடியைத் தாண்டிவிட்டது. தற்போது பாகுபலி 2 படத்தின் வசூல் கடந்த சனிக்கிழமை வரை ரூ. 1538 வசூல் செய்துள்ளது. இதையடுத்து சீனாவில் டங்கல் பெற்றுவரும் சூறாவளி வசூல் விரைவில் பாகுபலி 2 படத்தின் வசூலைத் தாண்டி விடும் என்று கணிக்கப்படுகிறது.