தனது வீட்டில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட 200 -க்கும் மேற்பட்டோருடன் நடிகர் ரஜினிகாந்த் திங்கள்கிழமை புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதில் 5 நாள்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அடையாள அட்டை பெற்றுவர முடியாமல் இருந்த ரசிகர்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் நீண்டநாள்களாக தனது ரசிகர்களை சந்திக்காமல் இருந்த நிலையில், கடந்த வாரம் தொடர்ந்து 5 நாள்கள், சென்னை ராகவேந்திரா திருமண மண்படத்துக்கு வரவழைத்து அவர்களை சந்தித்தார். இந்தச் சந்திப்பில் அவரது அரசியல் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திங்கள்கிழமை (மே 22) தனது அலுவலகம், வீட்டில் பணியாற்றும் ஊழியர்களுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்காக திங்கள்கிழமை காலை ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு வந்த ரஜினிகாந்த், தனது அலுவலக ஊழியர்கள், வீட்டுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
குறிப்பாக கடந்த வாரத்தில் 5 நாள்கள் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பில் விடுபட்ட ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.