நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி என நடிகர் விவேக் தெரிவித்தார்.
மதுரை விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என பலஆண்டுகளாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். வந்தால் மகிழ்ச்சி.
பாஜகவில் இணையப் போவதாக தவறான தகவல்கள் வருகின்றன. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் கனவு திட்டமான "கிரீன் இந்தியா' திட்டத்தின் படி ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வருகிறேன். அது தொடர்பாகவே மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அரசியல் பேசவில்லை. நான் அரசியலுக்கு வர மாட்டேன்.
மேலும் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆகவே, கிராமங்களில் உள்ள கண்மாய், ஏரி, குளங்களை தூர்வாரி நீரை சேமிக்க முன்வர வேண்டும் என்றார்.