ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அதன் முதல்கட்டமாக ஜெர்மனி தலைநகர் பெர்லினை திங்கள்கிழமை சென்றடைந்தார். இந்தியா - ஜெர்மனி இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கான இந்தப் பயணம், இரு நாட்டு நல்லுறவில் ஒரு புதிய அத்தியாயத்தை படைக்கும் என்று ஜெர்மனி சென்றடைவதற்கு முன்னர் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்நிலையில் பெர்லினில் நடிகை பிரியங்கா சோப்ரா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்த பிரியங்கா, பிரதமர் பெர்லினில் இருக்கும்போது நானும் அங்கு வந்திருப்பது தற்செயல். தொடர் பணிகளுக்கு இடையில் என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தந்த பிரதமருக்கு நன்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு தாதாசாகேப் பால்கே விருது விரைவில் வழங்கப்பட உள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில் அவர் பிரதமரைச் சந்தித்துள்ளார்.