கிரிக்கெட் வீரர் மீதான காதலை வெளிப்படுத்திய அனுஷ்கா!

இந்திய கிரிக்கெட் வீரர் மீதான தனது காதலை நடிகை அனுஷ்கா சமீபத்தில் வெளிப்படுத்தினார்.
கிரிக்கெட் வீரர் மீதான காதலை வெளிப்படுத்திய அனுஷ்கா!

தென்னிந்தியாவின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் அனுஷ்கா. 2005-ம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். பின்னர் பல கமர்ஷியல் வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 

இந்நிலையில், 2009-ம் ஆண்டு வெளியான அருந்ததி திரைப்படம் அனுஷ்காவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அன்றிலிருந்து முன்னணி கதாநாயகிகள் வரிசையில் இடம்பிடித்தார். மேலும் சிறந்த நடிகை என்ற பெயரும் பெற்றார்.

தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது, ஃபிலிம்ஃபேர் விருது, நந்தி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தெலுங்கு, தமிழில் நட்சத்திர நாயகியாக திகழ்கிறார்.

சமீபத்தில் வெளியான பிரமாண்டத் திரைப்படமான பாகுபலியில் நடித்து மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனிடையே நடிகர் பிரபாஸுக்கும் இவருக்குமான நட்பு அனைவரின் கவனத்தையும் பெற்றது.

அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடையே, நடிகை அனுஷ்கா இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் ராகுல் டிராவிட் தான் எனது ஃபேவரைட். என்னுடையே இளமைக் காலத்தில் அவர் மீதுதான் முதன்முதலில் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com