குழந்தைகள் தினத்திற்காக தனது மகனுக்கு ரூ.1.30 கோடி மதிப்புள்ள காரை பரிசளித்துள்ள பிரபல நடிகர்!

நேற்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் பிரபல இந்தி நடிகரான சயிஃப் அலிகான் தனது மகன் தைமூருக்கு ரூ.1.30 கோடி செலவில் கார் ஒன்றைக் குழந்தைகள் தின பரிசாக வழங்கியுள்ளார்.
குழந்தைகள் தினத்திற்காக தனது மகனுக்கு ரூ.1.30 கோடி மதிப்புள்ள காரை பரிசளித்துள்ள பிரபல நடிகர்!

நேற்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் பிரபல இந்தி நடிகரான சயிஃப் அலிகான் தனது மகன் தைமூருக்கு ரூ.1.30 கோடி செலவில் கார் ஒன்றைக் குழந்தைகள் தின பரிசாக வழங்கியுள்ளார்.

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான சயிஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர் தம்பதியின் முதல் குழந்தை தைமூர், இப்போது 11 மாத குழந்தையாக இருக்கும் தைமூருக்கு வருகின்ற டிசம்பர் 20-ம் தேதி அன்று வரவிருக்கும் முதலாம் ஆண்டு பிறந்தநாளை வெகுச்சிறப்பாக கொண்டாட இவர்கள் திட்டமிட்டு வருகிறார்கள். இன்னிலையில் குழந்தைகள் தினத்திற்கே மிகுந்த விலை மதிப்புள்ள ஒரு பரிசை சயிஃப் வழங்கி இருப்பது பலரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் இந்த புதிய காரில் முதலில் யாரை அழைத்துச் செல்ல போகிறீர்கள் என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு “இந்த ஜீப்பின் பின் இருக்கையில் குழந்தைகள் அமர்வதற்கான இருக்கை ஒன்று இருக்கிறது, அதனால் தைமூருக்குதான் முதல் சவாரி” என்று பதிலளித்துள்ளார். பின்னர் குழந்தைகள் தினத்திற்கு என்ன பரிசு தரப் போகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு “இந்த காரின் சிவப்பு நிறம் தைமூருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்தக் காரையே குழந்தைகள் தின பரிசாக கொடுக்கப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com