நடிகர் கமல்ஹாசன் - டிஐஜி ரூபா திடீர் சந்திப்பு

நடிகர் கமல்ஹாசனுடன் டிஐஜி ரூபா எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்கலில் வைரலாகி வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் - டிஐஜி ரூபா திடீர் சந்திப்பு

முன்னாள் சிறைத்துறை டிஐஜி-யாக இருந்த ரூபாவை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அவர் தற்போது நடிகர் கமல்ஹாசனைச் சந்தித்த புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் நடிகர் கமல்ஹாசனைச் சந்தித்த டிஐஜி ரூபா, அவருடன் புகைப்படம் எடுத்து அதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

When I meet or pose with someone, it doesn't mean that I subscribe to their ideology or approve of all they do. It never influences my discharge of duty...never. Human beings are social animals. It's just that. One can meet all kinds of people and yet not lose one's "self". — D Roopa IPS (@D_Roopa_IPS) November 26, 2017

மேலும், நான் யாரை சந்தித்தாலும், யாருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாலும் உடனே அவரின் சித்தாந்தங்களுக்கு நான் ஆதரவு அளிப்பதாக அர்த்தம் இல்லை. இதனால் எனது பணி எவ்விதத்திலும் பாதிக்கப்படப்போவதில்லை. மனிதர்களாகிய நாம் சமூகவாதிகள். ஒருவர் தனது வாழ்நாளில் அனைத்து விதமான மனிதர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதனால் அவரின் தனித்துவம் மாறாது என்று மற்றொரு ட்வீட்டையும் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, பெங்களூரு பரப்பன அகர்ஹார சிறையில் தண்டனை பெற்று வந்த சசிகலாவுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சிறப்புச் சலுகைகள் குறித்து கேள்வி எழுப்பியவர் தான் இந்த டிஐஜி தீபா. இதன்காரணமாக சிறைத்துறையில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டவர்.

அதுபோல, சமீபகாலங்களில் தனது அரசியல் வரவை நடிகர் கமல்ஹாசன் வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக சசிகலாவால் தான் பாதிக்கப்பட்டதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com