தீபாவளி அன்று வெளியிடப்பட்டு ரசிகர்களை மகிழ்வித்த மெர்சல் தொடர்ந்து இது வரை காணாத வசூல் சாதனைகளை தமிழகத்தில் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மெர்சல் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 155 திரை அரங்குகளில் வெளியானது. அங்கும் இதே வசூல் சாதனையை செய்து வருகிறது. மெர்சல் படம் பார்த்த ரசிகர்கள் விஜய் நடிப்பை சமூக வலைத்தளங்களில் பாராட்டி மகிழ்கின்றனர். அமெரிக்காவில் பிரிமியர் காட்சி நடைபெற்றதைத் தொடர்ந்து திரை அரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடியது. இதுவரை இப்படம் 435 ஆயிரம் டாலர் வசூல் செய்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துக்குப் பின் அமெரிக்காவில் விஜய் படம் முதன் முறையாக அதிக வசூல் பெற்றுள்ளது. உலகம் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் கவனத்தைப் பெற்றுள்ள மெர்சல் படம் வெளியான இரண்டே நாட்களில் வெற்றிப் பட வரிசையில் இணைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.