நீட் விவகாரம்: காலம் பதில் சொல்லும் என ராகவா லாரன்ஸ் பேட்டி!

நீட் தேர்வால் அனிதா உயிரிழந்தது போன்ற ஒரு சம்பவம் இனி நடைபெறக் கூடாது... 
நீட் விவகாரம்: காலம் பதில் சொல்லும் என ராகவா லாரன்ஸ் பேட்டி!

திருப்பதி ஏழுமலையானை நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் வழிபட்டார்.

பிறகு, அவர் செய்தியாளர்களிடம் நீட் விவகாரம் குறித்துக் கூறியதாவது:

நீட் தேர்வால் அனிதா உயிரிழந்தது போன்ற ஒரு சம்பவம் இனி நடைபெறக்கூடாது. நீட் விவகாரம் தொடர்பாக காலம் பதில் சொல்லும் என்று கூறினார். 

கடந்த ஜனவரி மாதம், ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுக்க தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நடைபெற்றபோது இளைஞர்களுக்கு நிறைய உதவிகள் செய்தார் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் நீட் விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கினார். இந்நிலையில் நீட் குறித்த தனது கருத்துகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com