பாரிஜாதம், போடா போடி, நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம் போன்ற படங்களுக்கு இசையமைத்த தரண் குமாருக்கு வருகிற 15-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
நடிகையும் மாடலிங் உலகைச் சேர்ந்தவருமான தீக்ஷிதாவை அவர் திருமணம் செய்கிறார். நகர்வலம் உள்ளிட சில படங்களில் நடித்த தீக்ஷிதாவை தரண் காதலித்த நிலையில் தற்போது இருவருக்கும் வருகிற வெள்ளியன்று திருப்பதியில் திருமணம் நடைபெறவுள்ளது. அதன்பின்பு, திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் செப்டம்பர் 16 அன்று நடைபெறவுள்ளது.