டிக்கெட்டுக்கு 1 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படும்: துப்பறிவாளன் பட வசூல் குறித்து விஷால்!

துப்பறிவாளன்’ படத்தின் திரையரங்கு வசூலில் இருந்து டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு, விவசாயிகள் குடும்ப நலனுக்காக அளிக்கப்படும் என்று  நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
டிக்கெட்டுக்கு 1 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படும்: துப்பறிவாளன் பட வசூல் குறித்து விஷால்!

சென்னை: முன்னரே அறிவித்திருந்தபடி ‘துப்பறிவாளன்’ படத்தின் திரையரங்கு வசூலில் இருந்து டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு, விவசாயிகள் குடும்ப நலனுக்காக அளிக்கப்படும் என்று  நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக பதவியேற்பு விழாவில், 'தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் திரைப்பட வருமானத்தில் இருந்து ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு,  விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும்'  என்று நடிகர் விஷால் அறிவித்து இருந்தார்.

அதன்படி விஷால் தயாரித்து நடித்து இன்று திரைக்கு வந்திருக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தின் மாநிலம் தழுவிய திரையரங்கு வருமானத்தில் இருந்து, ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 350-க்கும் அதிகமான தியேட்டர்களில் துப்பறிவாளன் திரையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com