பிக் பாஸ் குறித்து தொடர்ச்சியாக எழுதுவது ஏன்? நடிகை ஸ்ரீப்ரியா விளக்கம்

பிக் பாஸ், சொல்வதெல்லாம் உண்மை, நிஜங்கள் போன்ற நிகழ்ச்சிகள் குறித்து நான் ஏன் எழுதுகிறேன் என்று சிலர் கேட்கிறார்கள்... 
பிக் பாஸ் குறித்து தொடர்ச்சியாக எழுதுவது ஏன்? நடிகை ஸ்ரீப்ரியா விளக்கம்

நடிகை ஸ்ரீப்ரியா பிக் பாஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்து தனது சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து எழுதிவருகிறார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியைக் குறித்து அவர் தொடர்ந்து எழுதியதால் அந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டார். அங்கும் தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் பிக் பாஸ் குறித்த தொடர் பதிவுகள் குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

பிக் பாஸ், சொல்வதெல்லாம் உண்மை, நிஜங்கள் போன்ற நிகழ்ச்சிகள் குறித்து நான் ஏன் எழுதுகிறேன் என்று சிலர் கேட்கிறார்கள். நான் சுதந்தரமான நாட்டில் வாழ்கிறேன். எனக்கென்று சொந்தமாக தொலைக்காட்சிப் பெட்டி வைத்துள்ளேன். என்னுடைய கேபிள் இணைப்புக்கும் கட்டணம் அளிக்கிறேன். மேலும் என்னுடைய கருத்துகள் அவமரியாதை செய்யும் விதமாகவும் இருக்காது. ஊடகம் தொடர்பாகவே நான் பேசுகிறேன். அதில் எனக்கு அறிவும் உள்ளது. செளகரியமாகவும் உள்ளது. நான் எழுதுவது குறித்து யாருக்காவது பிரச்னை இருந்தால் அவர்கள் என் பதிவுகளிலிருந்து விலகிக்கொள்ளலாம். 

எனக்கு வேறு வேலை இல்லையா என்று கேட்பவர்களுக்கு - என் எழுத்துகளைப் படிப்பதை விடவும் வேறு வேலை உங்களுக்கு இல்லாதபோது எனக்குப் பிடித்ததை நான் செய்கிறேன் என்று நான் ஏன் சொல்லக்கூடாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com