தமிழ் நடிகை ராய் லட்சுமி ஹிந்தியில் நடித்த ஜூலி 2 படம் அக்டோபர் 6 அன்று வெளிவரவுள்ளது. ஜூலி 2 படம் தொடர்பாக ஆங்கில இதழுக்குப் பேட்டியளித்துள்ள ராய் லட்சுமி தோனியுடனான காதல் குறித்து கூறியதாவது:
தோனி குறித்து கேள்வி கேட்கிறீர்கள். யார் அவர்? தோனி குறித்த கேள்விகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும். அது நடந்து நாளாகிவிட்டது. அவர் தற்போது திருமணமாகி மகிழ்ச்சியாக உள்ளார். அவருக்குக் குழந்தை உண்டு. எல்லோருக்கும் எல்லோரையும் பற்றி இன்றைய உலகத்தில் தெரிகிறது. இன்று தெரியாத நபருடன் நாளை நீங்கள் இணையலாம். வாழ்க்கையின் தன்மை இப்படித்தான் இருக்கும். சில விஷயங்கள் நினைத்தபடி நடக்காது. எனில், நீங்கள் அடுத்தக் கட்டத்துக்கு நகரவேண்டும்.
அதற்குப் பிறகு நான் நான்கு பேருடன் டேட்டிங் வைத்துக்கொண்டேன். யாரும் அதைப் பற்றிப் பேசவில்லை. பரபரப்பான செய்தி என்பதால் தோனி பற்றி எழுதுகிறார்கள்.
நான் தோனியை டேட்டிங் செய்தேனா இல்லையா என்பது இங்கு முக்கியமில்லை. ஆனால் மக்கள் நான் அவரைத் திருமணம் செய்யப்போவதாக உடனடியாக எண்ணிக்கொண்டார்கள். அது நிச்சயம் உண்மையல்ல. இதுபோன்ற செய்திகள் எங்களைத் தர்மசங்கடத்துக்கு ஆளாக்கின. எனவே தான் நான் ஊடகங்களுடன் இதுபற்றி அதிகம் பேசுவதில்லை. இப்போது கொஞ்சம் பேசுகிறேன். தோனியைப் பற்றி விரிவாக நான் பேசவிரும்பவில்லை. ஏனெனில் அவரை நான் மிகவும் மதிக்கிறேன் என்று கூறியுள்ளார்.