‘மெளனி ராய்’ தவிர நாகினியாக வேறொருவரை ஏற்க முடியாது! இணையத்தில் கொந்தளிக்கும் ரசிகர்கள்

நாகினி 3 ல் நாகினியாக நடிக்கவிருக்கும் நடிகை கரிஷ்மா தன்னாவின் நாகினி சீரிஸ் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன. அதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
‘மெளனி ராய்’ தவிர நாகினியாக வேறொருவரை ஏற்க முடியாது! இணையத்தில் கொந்தளிக்கும் ரசிகர்கள்

நாகினி என்பது சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு முன்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஒரு மொழிமாற்றுத் தொடர். இந்தியில் வெளியாகி பெருவெற்றி பெற்ற இந்தத் தொடரை தயாரித்து வழங்குவது ஏக்தா கபூரின் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் நிறுவனத்தார். நாகினியில் 1 & 2 பாகங்கள் முடிந்து தற்போது மூன்றாம் பாகம் தயாரிப்பில் இருக்கிறது என்கிறார்கள். இந்நிலையில் நாகினி 2 புதிதாக ஆரம்பமாகி இருக்கும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடருக்கு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பரவலான ரசிகர்கள் இருந்தாலும் தொடரின் நாயகியான மெளனி ராய்க்கு ரசிகர்களாக இளைஞர்கள் பட்டாளம் அனேகமிருக்கிறது. மெளனி ராய்க்காக அடிக்கடி இணையத்தில் உருகும் அந்த ரசிகர்கள் தற்போது நாகினி பார்ட் 3 யில் மெளனி ராய்க்குப் பதிலாக நாகினி வேடத்தில் நடிக்க வேறொரு நடிகை தேர்வாகி இருக்கிறார் எனும் ஏக்தா கபூரின் அறிவிப்பில் மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

புது நாகினியாக கரிஷ்மா தன்னா...

பல ரசிகர்கள் ஏக்தாவின் இணையப் பக்கத்திற்குச் சென்று, எப்படி உங்களால் இப்படி முடிவெடுக்க முடிந்தது? மெளனி ராய்க்குப் பதிலாக வேறொருவரை எங்களால் நாகினியாக ஏற்றுக் கொள்ளவே முடியாது’ என்று தங்களது மறுப்பைக் கருத்துக்களாக பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஏக்தா கபூர் அறிவிப்பின் படி நாகினி 3 ல் நாகினியாக நடிக்கவிருக்கும் நடிகை கரிஷ்மா தன்னாவின் நாகினி சீரிஸ் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன. அதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com