தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம்அமைக்கக் கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நடிகர் சிம்பு, கர்நாடக மக்கள் அங்குள்ள தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து ஒற்றுமையை நிரூபியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். சிம்புவின் இந்த அணுகுமுறைக்குப் பரவலான பாராட்டுகள் கிடைத்தன. மக்கள் பெயரில் அங்குள்ள அரசியல்வாதிகள்தான் தண்ணீர் தர மறுக்கிறார்கள். அதற்குக் காரணம் ஓட்டு என்று பேட்டியளித்தார் சிம்பு.
இந்நிலையில் இதன் அடுத்தக்கட்டமாக சேலத்தில் உள்ள ஏரிகளை இன்று பார்வையிட்டார் சிம்பு. சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷுடன் மூக்கனேரியைப் படகு மூலம் பார்வையிட்டதன் படங்களும் காணொளிகளும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.