லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள கோலமாவு கோகிலா (கோகோ) படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இசை - அனிருத். கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் கோலமாவு கோகிலா வெளியானது.
இப்படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். ப்ரோமோஷனுக்காக வெளியான 'எனக்கு கல்யாண வயசு தான் வந்துடுச்சு' என்ற பாடல் கோலமாவு கோகிலா படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. கோலமாவு கோகிலாவாக நயன்தாரா வாழ்ந்திருக்கிறார் எனலாம். அப்படியொரு ரகளையான பாத்திரம். முதற்காட்சி முதல் இறுதிக்காட்சி வரை அப்பாவித்தனமான முகத்தை வைத்துக்கொண்டு சிக்கலான வியூகங்களுக்குள் சாமர்த்தியமாக இவர் பயணிக்கும் விதம் அபாரம். நயன்தாரா என்றல்ல, ஒவ்வொரு பாத்திரங்களுக்குமே பிரத்யேகமான குணாதியசத்தையும் தோரணையையும் தர இயக்குநர் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். நகைச்சுவையை அதகளப்படுத்தியுள்ள இயக்குநருக்கு பலத்த பாராட்டுக்கள் கிடைத்துக் கொண்டிருக்கும் வேளையில், இப்படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை போனில் அழைத்து தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். 'சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்' என்று நெல்சன் திலீப்குமாரிடம் படம் பிடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதை நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Got a surprise call ,The moment when Thalaivar @rajinikanth said " loved it , sirichu sirichu enjoyed it " ...Big moment for me and team #KolamaavuKokila Thank you sir