நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கேரளத்தைச் சேர்ந்த இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், தன்மீது பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்குகளை ரத்து செய்யக்கோரி...
நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கேரளத்தைச் சேர்ந்த இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், தன்மீது பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்குகளை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

மலையாளத்தில் விரைவில் வெளியாகவுள்ள 'ஒரு அடார் லவ்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் வரிகள், முஸ்லிம் மதத்தினரைக் காயப்படுத்துவது போல் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து, அந்தத் திரைப்படத்தில் நடித்துள்ள பிரியா வாரியருக்கு எதிராக தெலங்கானா மாநிலத்தில் போலீஸாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தன் மீது தெலங்கானாவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்கை ரத்து செய்யகோரியும், பிற மாநிலங்களில் அளிக்கப்பட்டுள்ள புகார்கள் மீது தன்மீது போலீஸார் வழக்குகள் தொடுக்கக்கூடாது என்று உத்தரவிடக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பிரியா வாரியர் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார்.

உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு நேற்று பரிசீலிக்கப்பட்டது. அப்போது வழக்குரைஞர் ஹாரிஸ் பீரன் ஆஜராகி, பிரியா வாரியரின் மனுவை உச்ச நீதிமன்றம் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையேற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், பிரியா வாரியரின் மனு மீது இன்று விசாரணை நடத்த ஒப்புக் கொண்டது.

இதன் அடிப்படையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, எந்த மாநிலமும் நடிகை பிரியா வாரியர் மீதும், படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீதும் வழக்கு பதியக்கூடாது என்றும் மஹாராஷ்டிரா, ஹைதராபாத் காவல்நிலையங்களில் தரப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com