அரிதாரம் பூசி நடிகையாக கேமராவிற்கு முன் நிற்கத் தொடங்கிய நாள் முதல் எத்தனை ஆயிரம் புகைப்படங்களுக்கு எத்தனைவிதமான முகபாவங்களுடன் நின்றிருப்பார் ஸ்ரீதேவி!
இறுதியாக அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் சிரிக்கும்போது, இது என்றென்றும் உறைந்திருக்கப் போகும் அவரின் கடைசி சிரிப்பு என்று ஒருவரும் நினைத்திருக்க முடியாது. வாழ்க்கை அவ்விதம் தான். பல சமயம் எதிர்பாராதது.
இந்தியத் திரையுலககின் நிகறற்ற தாரகையாய் வாழ்ந்து மறைந்த ஸ்ரீதேவி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களை கலங்கச் செய்துவிட்டன. விழாவில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, தன் வாழ்நாளின் கடைசி நிமிடங்களை மகிழ்ச்சியாக கழித்தார் அவர். அப்போது எடுக்கப்பட்ட ஸ்ரீதேவியின் கடைசி புகைப்படங்கள் இவை :
***
***
இந்தப் புகைப்படங்களுக்கு கீழ் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கண்ணீர் அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர் ரசிகர்கள்.