ஆதாரங்களைக் கவுதமி கொடுப்பாரேயானால், நிச்சயம் நாங்கள் பணம் தரத் தயார்! கவுதமியின் சம்பள குற்றச்சாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் விளக்கம்

திரைப்படங்களில் பணியாற்றிய வகையில் கமலஹாசனிடம் இருந்து எனக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளது என்று நடிகை கவுதமி அண்மையில் புகார் அளித்திருந்தார்.
ஆதாரங்களைக் கவுதமி கொடுப்பாரேயானால், நிச்சயம் நாங்கள் பணம் தரத் தயார்! கவுதமியின் சம்பள குற்றச்சாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் விளக்கம்

திரைப்படங்களில் பணியாற்றிய வகையில் கமலஹாசனிடம் இருந்து எனக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளது என்று நடிகை கவுதமி அண்மையில் புகார் அளித்திருந்தார்.

தனது கணவரைப் பிரிந்தவுடன் நடிகை கவுதமி நடிகர் கமலுடன் கடந்த பத்தாண்டுகளாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவர் கமலை விட்டு பிரிந்து விட்டார்.

கமலும் கவுதமியும் மீண்டும் சேர்ந்து வாழ இருப்பதாக தகவல்கள் சில ஊடங்கங்களில் வெளியாகின. இதனை நடிகை கவுதமி மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது வலைப்பூவில் எழுதிய செய்தி குறித்து, டிவிட்டரில் தகவல் பகிந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: '

நாங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழப் போவதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது. 2016-ம் ஆண்டில் பிரிந்து வந்த பிறகு நான் அவருடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ளவில்லை.
 
அதே போல நானும், கமலும் பிரிந்ததற்கு அவருடைய மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா ஆகியோர் காரணம் என்று கூறப்படுவது தவறானது. இதில் அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. 

கமலை விட்டு வெளி வந்ததை தொடர்ந்து நானும் எனது மகளும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி இருக்கிறேன். இப்போது எங்களுக்கு ஒரு நிலையான வருமானம் வேண்டும். எனது குழந்தைக்கு பொருளாதாரரீதியாக ஒரு ஸ்தரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்று நான் தேவையான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். 

கமலுடன் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த விஸ்வரூபம், தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் உடை அலங்கார நிபுணராக பணியாற்றினேன். ஆனால், அதற்கு தர வேண்டிய சம்பளம் இன்னும் முழுமையாக தரப்படவில்லை.
 
இது சம்பந்தமாக நான் பல தடவை நினைவுபடுத்தி தகவல் அனுப்பி இருக்கிறேன். ஆனாலும், எனக்குச் சேர வேண்டிய பணத்தை அவர்கள் இன்னும் எனக்கு செட்டில் செய்யவில்லை. இதனால் சம்பள பாக்கி தராததால் பொருளாதார ரீதியாக எனக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

கமல்ஹாசன் புதிதாக அரசியல் கட்சி தொடங்கி வழி நடத்திவரும் இவ்வேளையில், இப்படியொரு பிரச்னையை கவுதமி எழுப்பியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. நடிகை கவுதமியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் பதிலளித்துள்ளது. தசாவதாரம்' படத்தின் தயாரிப்பாளர், ஆஸ்கர் ரவிச்சந்திரன்; 'விஸ்வரூபம்' படத் தயாரிப்பு பி.வி.பி சினிமாஸ் நிறுவனத்தார். இந்தப் படங்களில் கவுதமிக்கு சம்பளப் பிரச்னை இருந்தால், அதற்கு ராஜ்கமல் பிலிம்ஸ் எந்தவிதத்தில் பொறுப்பேற்க முடியும்?

மேலும் திரைத்துறையைப் பொருத்தவரை, ஒரு படத்தில் வேலை செய்யக் கூடிய நடிகர்களில் தொடங்கி டெக்னீஷியன்கள் வரை அனைவரிடமும், சம்பளம், முன்பணம் போன்ற விபரங்களைத் தெளிவாக ஒப்பந்தம் போட்டு பிறகுதான் வேலையை ஆரம்பிப்பார்கள். அந்த வகையில் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட படங்களில், காஸ்ட்யூம் டிசைனராகக் கவுதமி பணியாற்றியதற்கான சம்பளத் தொகை அனைத்தும் முழுவதுமாக ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டது.

மாறாக, ராஜ்கமல் நிறுவனம் பணம் தரவேண்டியிருப்பதற்கான ஆதாரங்களைக் கவுதமி கொடுப்பாரேயானால், நிச்சயம் நாங்கள் பணம் தரத் தயாராகவே இருக்கிறோம்' என்று ராஜ்கமல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com