துபையில் உறவினர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கணவர் போனி கபூர் மற்றும் குடும்பத்தினருடன் சென்ற ஸ்ரீதேவி நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அங்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் மயங்கிய நிலையில் குளியல் அறைத் தொட்டியில் மூழ்கி இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
எல்லாத் தொலைக்காட்சிகளும் ஸ்ரீதேவி நடித்த படங்களின் காட்சிகளையும் பாடல்களையும் ஒளிபரப்பி வருகிறார்கள். நாளை நடிகை சன்னி லியோன் இறக்கும்போது என்ன நடக்கும் என ஆச்சர்யப்படுகிறேன் என்று ட்வீட் வெளியிட்டுள்ளார்.