இயக்குநர் கார்த்திக் நரேன் மூன்றாவது படத்துக்குத் தயார்!

எனது மூன்றாவது படத்துக்குக் கையெழுத்திட்டுள்ளேன். இந்தக் கதை என் மனத்துக்கு நெருக்கமானது...
இயக்குநர் கார்த்திக் நரேன் மூன்றாவது படத்துக்குத் தயார்!

துருவங்கள் 16 படத்தின் மூலம் அதிகக் கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேனின் அடுத்தப் படம் - நரகாசுரன்.

அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் கெளதம் மேனன் தயாரித்துள்ளார். அரவிந்த சாமி, இந்திரஜித், சுந்தீப் கிஷன், ஸ்ரியா சரண், ஆத்மிகா போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - யோகன். 2018 பிப்ரவரியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2-வது படம் இன்னும் வெளிவராத நிலையில் 3-வது படத்துக்குத் தயாராகிவிட்டார் கார்த்திக் நரேன். இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:

எனது மூன்றாவது படத்துக்குக் கையெழுத்திட்டுள்ளேன். இந்தக் கதை என் மனத்துக்கு நெருக்கமானது. விவரங்கள் விரைவில் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com