எல்லாம் போனபின்பும் கவிதை எழுதத் தெரிந்தால் பிழைத்துக் கொள்ளலாம்: லிங்குசாமி பேச்சு

எப்படியும் எழுதிப் பிழைத்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கையில்தான் நான் சென்னைக்கு வந்தேன்...
எல்லாம் போனபின்பும் கவிதை எழுதத் தெரிந்தால் பிழைத்துக் கொள்ளலாம்: லிங்குசாமி பேச்சு

இயக்குநர் லிங்குசாமியின் "லிங்கூ-அய்க்கூ" புத்தக வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் விஷால், கீர்த்தி சுரேஷ், பேராசிரியர் ஞானசம்பந்தம், இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், கவிஞர் பிருந்தா சாரதி, நடன இயக்குநர் ராஜு சுந்தரம், எழுத்தாளர் எஸ். ராம கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். 

இந்த விழாவில் லிங்குசாமி பேசியதாவது: 

தாகூரின் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது. சரியானவற்றை நீ தேர்ந்தெடுப்பதில்லை, சரியானவை உன்னைத் தேர்ந்தேடுக்கின்றன. அவ்வாறு அமைந்தவர்கள்தான் என்னுடைய அனைத்து நண்பர்களும். இந்த மேடையும் அப்படித்தான். இங்கு மேடையில் உள்ளவர்களுடனான நட்பின் காலம் 25 வருடம் அல்லது 25 மாதங்கள் இருக்கலாம் ஆனால் இவர்களிடம் நீண்ட ஓரு பிடிப்பு உள்ளது. 

பாலாஜி சார் தான் முதல்முறையாக என்னுடைய கவிதையைப் படித்துக்காட்டி என்னை உதவி இயக்குநராகச் சேர்த்துவிட்டார். பாலாஜி சாரை அறிமுகப்படுத்தியவர் பாலன். மூன்று வரிக் கவிதையை எழுதவேண்டும் என்று முதல்முதலாகச் சந்தித்த பிருந்தா சாரதி, இப்போது என்னுடைய கவிதைப் புத்தகத்தை வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு மூன்று வரிக் கவிதை விகடனில் எழுதி 30 ரூபாய் பணம் வந்த பிறகு எப்படியும் எழுதிப் பிழைத்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கையில்தான் நான் சென்னைக்கு வந்தேன். இப்போதும் இதற்கு முன்பு கவிதை வெளியீட்டு விழாவில் கூறியது போல, நம்மிடமிருந்து எல்லாம் போன பின்பும் கவிதை எழுதத் தெரிந்தால் பிழைத்துக்கொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com