அண்மையில் மாரி 2 படப்பிடிப்பில் டொவினோ தாமஸுடன் சண்டைக் காட்சியின் போது ஏற்பட்ட காயத்தினால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டு தனுஷ் ஓய்வில் உள்ளார். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி தனுஷ் விரைவில் நலமடைய வேண்டும் என்று வேண்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதைப் பார்த்து நெகிழ்ந்த தனுஷ், தனது ட்விட்டரில் கூறியது, 'என் அன்பார்ந்த ரசிகர்களுக்கு...எனக்கு பெரிய காயங்கள் ஏதுமில்லை. நான் நலமாக உள்ளேன். உங்கள் பிரார்த்தனைக்கும் அன்புக்கும் மிகவும் நன்றி. என்றென்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.
நீங்கள் தான் என்னுடைய வலிமையின் ஆதாரம் நீங்கள் தான்’ என்று பதிவிட்டுள்ளார்.