மாற்றம் வரும் வரை வேலை நிறுத்தம் தொடரும்: விஷால்

டிஜிட்டல் கட்டணம் தொடங்கி திரையரங்குகளில் வசூலிக்கப்படும் வாகன நிறுத்தக் கட்டணம் வரை அனைத்திலும் மாற்றம் வரும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர்
மாற்றம் வரும் வரை வேலை நிறுத்தம் தொடரும்: விஷால்

டிஜிட்டல் கட்டணம் தொடங்கி திரையரங்குகளில் வசூலிக்கப்படும் வாகன நிறுத்தக் கட்டணம் வரை அனைத்திலும் மாற்றம் வரும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார்.
இது குறித்து சென்னை செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:-
டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக நடந்து வரும் வேலை நிறுத்தத்தால் தமிழ் சினிமா உலகம் முடங்கியுள்ளது. இதில் குறிப்பிடும்படியாக தமிழ்த் திரைப்படங்களின் வெளியீடு இருக்காது என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. 
தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் மிக அதிகப்படியான கட்டணத்தைக் குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்டும், கொஞ்சமும் செவி சாய்க்காத டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு எதிராக தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் சங்கங்கள் ஒட்டு மொத்தமாக ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எந்த ஒரு திரைப்படத்தையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை. 
இந்நிலையில் இந்த விஷயத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பல கோடி ரூபாய்களில் எடுக்கப்படும் படங்களுக்கு எந்த விதத்திலும் லாபம் என்பது இல்லை. பல தயாரிப்பாளர்கள் பெயருக்கு படங்கள் எடுத்து வருகிறார்கள். ஃபிலிம் பயன்படுத்தப்பட்டு வந்த காலத்தில் நிறைய லாபம் வந்தது. இப்போது டிஜிட்டல் காலத்தில் எந்த லாபமும் இல்லை. 
மாற்று ஏற்பாடுகள் நடக்கின்றன: இப்போது ரூ. 32 ஆயிரம் வரை டிஜிட்டல் நிறுவனங்கள் வசூல் செய்கின்றன. இன்னொரு நிறுவனம் ரூ. 12 ஆயிரத்துக்கு செய்து தர முன் வந்துள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அதை வரவேற்கிறோம். இதில் இறுதி முடிவு எட்டும் வரை புதிய படங்கள் வெளிவராது. 
திரையரங்குகளிலும் மாற்றம்: திரையரங்குகளிலும் அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. டிக்கெட் விற்பனையை முழுவதும் கணிணி மயமாக்க வேண்டும். வாகன நிறுத்தக் கட்டணத்தையும் குறைக்க வேண்டும். இப்படி அனைத்து விஷயங்களிலும் மாற்றம் வரும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்றார் விஷால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com