என்ன ஓர் அனுபவம்: செக்கச் சிவந்த வானம் படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் உருக்கம்

இந்தப் படத்தில் என்னுடைய பணிகள் முடிவடைந்துவிட்டன. மணி ரத்னம் சார் இயக்கத்தில் நடித்தது...
என்ன ஓர் அனுபவம்: செக்கச் சிவந்த வானம் படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் உருக்கம்

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் போன்றோர் நடிக்கிறார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். இது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது தயாரிப்பு.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தங்களுடைய பணிகளை முடித்துவிட்டதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்கள்.

இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது: இந்தப் படத்தில் என்னுடைய பணிகள் முடிவடைந்துவிட்டன. மணி ரத்னம் சார் இயக்கத்தில் நடித்தது என்ன ஓர் அருமையான அனுபவம். என் கனவு நிஜமாகியுள்ளது. மிக்க நன்றி சார் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com