ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டபோது கலவரம் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு, போலீஸ் தடியடியில் 60-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். கல்வீச்சில் 15 போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து இயக்குநர் ஷங்கர் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:
இது அதிர்ச்சியையும் வலியையும் ஏற்படுத்துகிறது. தூத்துக்குடியில் மரணமடைந்த மக்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.