துப்பாக்கிச் சூட்டில் ஸ்டண்ட் சில்வாவின் தங்கை கணவர் மரணம்

எனது அன்புத்தங்கையின் கணவர் ஆருயிர் மாப்பிள்ளை ஜே. செல்வராஜ், ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக...
துப்பாக்கிச் சூட்டில் ஸ்டண்ட் சில்வாவின் தங்கை கணவர் மரணம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டபோது கலவரம் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு, போலீஸ் தடியடியில் 60-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். கல்வீச்சில் 15 காவல்துறையினருக்குக் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் தமிழ்த் திரையுலகின் ஸ்டண்ட் கலைஞரான ஸ்டண்ட் சில்வா தன்னுடைய தங்கையின் கணவர், துப்பாக்கிச் சூட்டில் இறந்துவிட்டதாக ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்ததாவது:

எனது அன்புத்தங்கையின் கணவர் ஆருயிர் மாப்பிள்ளை ஜே. செல்வராஜ், ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். மிக்க வேதனையோடு பகிர்கிறேன் என்று எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com