நடிகர் அரவிந்த்சாமி, விரைவில் இயக்குநராகவுள்ளார்.
இதுகுறித்து அவர் பேட்டியளித்ததாவது:
திரைப்பட உருவாக்கம் குறித்து நன்குக் கற்றுக்கொண்டுள்ளதாக எண்ணுகிறேன். அதனால்தான் தற்போது இயக்குநராகத் தயாராகிவிட்டேன். அது கடினமான பணியாக இருந்தாலும் புதிரானதல்ல. என்னுடைய கதை முக்கியமான இயக்குநர்கள் சிலரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. படத்தின் தொழில்நுட்பக் குழுவையும் தேர்வு செய்துவிட்டேன். இந்த வருட இறுதியில் படப்பிடிப்பை ஆரம்பிக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார்.
அரவிந்த்சாமி நடிப்பில் உருவான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் சமீபத்தில் வெளியானது. சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, நரகாசுரன், செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்கள் நடித்து வருகிறார்.