நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸின் படத்தில் நடிக்கவுள்ளதாக நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
திரையுலகில் நடிகைகளுக்கு ஏற்படும் தொல்லைகளை வெளிஉலகுக்குத் தெரியப்படுத்த போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர், நடிகை ஸ்ரீரெட்டி. நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் மீதும் பாலியல் குற்றச்சாடைச் சுமத்தினார். எனினும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தார் லாரன்ஸ்.
இந்நிலையில் ஃபேஸ்புக்கில் ஸ்ரீரெட்டி எழுதியுள்ளதாவது:
என் நண்பர்களுக்கு நல்ல செய்தியை அளிக்கிறேன். லாரன்ஸை அவர் வீட்டில் சந்தித்தேன். என்னை நன்கு உபசரித்தார். அங்கு நிறைய குழந்தைகள் இருந்ததைக் கண்டேன். அவரிடம் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அவர்கள் எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். ஆடிஷனில் கலந்துகொண்டேன். அவருடைய அடுத்தப் படத்தில் என்னைச் சேர்த்துக்கொண்டார். நல்ல கதாபாத்திரம் அளிப்பதாக உறுதியளித்தார். அதற்கான அட்வான்ஸ் தொகையையும் பெற்றுக்கொண்டேன். புயலால் பாதிக்கப்பட்ட ஸ்ரீகாகுளம் மக்களுக்கு அந்தத் தொகையை அளிக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார்.