இந்தியாவில் ப்ரயன் ஆடம்ஸ் ராக் ஷோ... தொகுப்பாளர்கள் ஆகிறார்கள் ‘பிக் பி’ மற்றும் ‘பாகுபலி’!

இந்தியாவில் மும்பை, அகமதாபாத், ஹைதராபாத் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் அக்டோபர் 9 முதல் 13 வரை நடைபெற விருக்கும் ப்ரயனின் இசை நிகழ்ச்சிகளில் ப்ரியங்கா சோப்ரா, ஏஆர் ரகுமான் உள்ளிட்ட பிரபலங்கள் ப
இந்தியாவில் ப்ரயன் ஆடம்ஸ் ராக் ஷோ... தொகுப்பாளர்கள் ஆகிறார்கள் ‘பிக் பி’ மற்றும் ‘பாகுபலி’!

கனடாவைச் சேர்ந்த பாடகர், பாடலாசிரியர், கிடாரிஸ்ட், புகைப்பட நிபுணர், கொடையாளர் மற்றும் தன்னார்வலருமான ப்ரயன் ஆடம்ஸைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவரது ராக் ஆல்பங்கள் உலகம் முழுக்க இசை ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவை. 1983 ல் தான் வெளியிட்ட cuts Like A knife ஆல்பம் மூலமாக கனடா மற்றும் அமெரிக்காவில் மட்டுமே பிரபலமாக இருந்து வந்த ப்ரயன் ஆடமின் புகழ் சர்வ தேச அளவில் பரவி அவரை குளோபல் ஸ்டார் ஆக்கியது. 1984 ல் வெளி வந்த அவரது Reckless  ஆல்பத்தில் இடம்பெற்றிருந்த Run To You, summer of 69 உள்ளிட்ட பாடல்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாக 1991 ல் ப்ரயன் வெளியிட்ட Waking up the Neighours ஆல்பத்தின் (Everything I Do ) Do It For You பாடல் ஒரெ இரவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து உலக அளவில் பல்வேறு நாடுகளின் இசை ஆல்ப விற்பனையில் முதலிடம் பிடித்தது. அவரது இசைச்சேவைக்காக இதுவரை ப்ரயன் ஆடம், 15 கிராமி அவார்டுகள் முதல் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

சரி அதற்கு என்ன இப்போது என்கிறீர்களா? ப்ரயன் ஆடம் தனது இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக இந்தியா வரப்போகிறார். அக்டோபரில் நிகழவிருக்கும் அந்த மாபெரும் இசை விருந்துக்காக இப்போதிருந்தே இந்தியாவின் இசை ஆர்வலர்களும் ஆடம்ஸின் ரசிகர்களுமான கோடிக்கணக்கான விசிறிகள் படு ஆர்வமாகக் காத்திருக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ப்ரயன் ஆடம்ஸ் இந்தியா வருவதே இந்திய இசை ரசிகர்களுக்கு ஒரு த்ரில் அனுபவம் என்றால் அதில் மேலும் த்ரில் சேர்க்கும் விதமான இன்னொரு செய்தியும் வெளியாகி இருக்கிறது. ஆடம்ஸின் இந்திய இசை விழாக்களை மும்பையில் தொகுத்து வழங்கவிருப்பது பிக் பி அமிதாப் என்றால் ஹைதராபாத்தில் தொகுத்து வழங்கவிருப்பது பாகுபலி பிரபாஸ் என்கிறார்கள். இது தான் ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் ஆகச் சிறந்த த்ரில் அனுபவமாக அங்கத்திய மக்களால் இப்போது பார்க்கப் படுகிறது. ஏனெனில் நடிகர் பிரபாஸ் பிற டோலிவுட் நடிகர்களைப் போல கலகலப்பானவர் இல்லை... கோலிவுட்டின் இளைய தளபதி போல கூட்டத்தின் முன்னால் அடக்கி வாசிக்கக் கூடிய கூச்ச சுபாவி எனது அவரது ரசிகர்களுக்குத் தெரிந்த செய்தி. இந்நிலையில் ஹைதராபாத்தில் திட்டமிடப்பட்டு இருக்கும் ப்ரயனின் இசை நிகழ்ச்சியை பிரபாஸ் தொகுத்து வழங்கப் போகிறார் என்பதை அவரது ரசிகர்களால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஒருவேளை இது சாத்தியமானால் அது பாகுபலி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கலாம்.

இந்தியாவில் தனது இசை நிகழ்ச்சி நடைபெறப்போவதை   உறுதி செய்துள்ள ப்ரயன் ஆடம்ஸ்...  ‘நமஸ்தே இந்தியா, இந்தப் பரந்த உலகில் எனது விருப்பத்திற்குரிய இடங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்தியர்களின் அன்பும், கருணையும் அளப்பரியது... அதை மீண்டுமொருமுறை உணரக் கிடைத்த வாய்ப்பாகவும், மிக மிக அழகான இந்தியாவை மீண்டுமொரு தரிசிக்கும் வாய்ப்பாகவும்  இந்த இசை நிகழ்ச்சியைக் கருதுகிறேன். ’ என்று தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

இந்தியாவில் மும்பை, அகமதாபாத், ஹைதராபாத் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் அக்டோபர் 9 முதல் 13 வரை நடைபெற விருக்கும் ப்ரயனின் இசை நிகழ்ச்சிகளில் ப்ரியங்கா சோப்ரா, ஏஆர் ரகுமான் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image courtesy: pre press journal

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com