விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை யாஷிகா வெளியேறியுள்ளார். இதையடுத்து இறுதிச்சுற்றில் அவர் இடம்பெறவில்லை.
யாஷிகாவின் வெளியேற்றம் குறித்து நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் கூறியதாவது:
சூப்பர் சிங்கர் போட்டியை சத்யபிரகாஷ் வெல்லாதபோது, இந்தமுறை ஸ்ரீகாந்த் வெல்லாதபோது என விஜய் டிவி பலமுறை என்னை ஏமாற்றமடைய வைத்துள்ளது. சூப்பர் சிங்கர் என்றால் திறமையில் நிபுணத்துவம் கொண்டவர் என்று அர்த்தம் இல்லையா? யாஷிகாவின் வெளியேற்றத்தில் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். இதை நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் முதல் இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.