இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வர்த்தகத்தில் தனி முத்திரை பதித்துள்ள சுதிர் புதோடா தனது ராமா ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரித்து வரும் படம் "கடைசி பெஞ்ச் கார்த்தி'. பரத் கதாநாயகனாக நடிக்கிறார். பஞ்சாபில் மியூசிக்கல் ஆல்பங்களின் பிரபல மாடலான ருஹானி ஷர்மா, அங்கனாராய் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். ரவிமரியா, ஞானசம்பந்தன், சனா, சுரேகா, வாணி, இயக்குநர் காசி, மூணார் டேவிட், வினோத் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரவி பார்கவன். இவர் தமிழில் "வெல்டன்', "ஒரு காதல் செய்வீர்', "திரு ரங்கா' ஆகிய படங்களையும், தெலுங்கில் இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.