8 விதமான தோற்றங்களில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படம், "ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' . புதுமுகம் ஆறுமுக குமார் எழுதி இயக்கவுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் கௌதம் கார்த்திக், காயத்ரி, ரமேஷ் திலக், நிகாரிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவாளராகவும், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். காடுகளின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளதால், வனம் சார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் 8 விதமான தோற்றங்களில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. பழங்குடி மக்களின் தலைவராக நடித்துள்ள விஜய் சேதுபதி முதல் பாதியில் நகரத்தில் வாழ்பவராகவும், இரண்டாம் பாதி முழுவதும் காட்டுக்குள் வாழ்வது போலவும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.