ஒரு கிடாயின் கருணை மனு

ஆட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "ஒரு கிடாயின் கருணை மனு'.
ஒரு கிடாயின் கருணை மனு

ஆட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "ஒரு கிடாயின் கருணை மனு'. ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட்  நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில்,  விதார்த்,  ரவீனா, ஜார்ஜ், கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரகுராம் இசையமைக்கிறார்.   கே.எல். பிரவீன் படத்தொகுப்பு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் சுரேஷ் சங்கையா. பங்கேற்று நடித்துள்ள 40 முக்கிய கதாபாத்திரங்களுக்கு திரைக்கதையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சிறு தெய்வங்களின் வழிபாடு  முக்கியம் என்பது இந்த கதை சொல்ல வரும் செய்தியாக இருக்கும். அருப்புக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கதை நடக்கிறது. கனடா, கேரளம் உள்ளிட்ட திரைப்பட விழாக்களுக்கு இப்படம் அனுப்பப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com