சிறிய இடைவெளிக்குப் பின் பிரசாந்த் மீண்டும் நடித்து வரும் படம் "ஜானி'. சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் வெற்றிச்செல்வன். படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. படம் குறித்து தயாரிப்பாளர் தியாகராஜன் பேசும் போது... இது ஒரு ஆக்ஷன் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை. படம் தொடங்கிய 15-ஆவது நிமிடத்தில் இருந்து கிளைமாக்ஸ் தொடங்கி விடும் என்பதுதான் திரைக்கதையின் புதுமை. அடுத்து என்ன என்பதைக் கணிக்க முடியாத அளவுக்கு படத்தின் வேகம் இருக்கும்.
கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இது பிரசாந்தின் திருப்புமுனை படமாக இருக்கும் என்று நம்புகிறேன். அதே சமயத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் விதமாக படம் உருவாகியுள்ளது'' என்றார் தியாகராஜன்.