பொக்ரான், கார்கில், தங்க நாற்கரச்சாலை, தில்லி லாகூர் பேருந்து, சிறப்பான வெளிநாட்டு உறவு இப்படி பல, ஈழம் தவிர்த்து மற்ற அனைத்து விஷயங்களிலும் பாராட்டுதலுக்குரியவர் வாஜ்பாய் என்று தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் கஸ்தூரி.
அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாய் இரு தேசபக்தர்களுக்கும் நாடுதான் குடும்பம். நேர்மைக்கும் நாணயத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர்கள். அவர்கள் இணைந்த அந்த காலகட்டமே இந்தியாவின் பொற்காலம் என்றும் மற்றொரு ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் கஸ்தூரி.