Thursday, March 11, 2010 10:09 PM IST
ஜோதிடம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்
கே.சி.எஸ்.ஐயர், சென்னை


எனது மகனுக்கு 34 வயது ஆகிறது.​ எம்.சி.ஏ.​ படித்துள்ளான்.​ அவனுக்குத் திருமணம் நடைபெற்றபோது சாஃப்ட்வேர் கம்பெனியில் என்ஜினியராகப் பணிபுரிந்தான்.​ தற்போது ஒன்றரை வருடங்களாக வேலையில்லாமல் இருக்கிறான்.​ இதனால் ஊராரின் பேச்சுக்கும்,​​ ஏச்சுக்கும் ஆளாகியுள்ளான்.​ இதன் காரணமாக குடும்பத்திலும் அடிக்கடி சண்டை ஏற்பட,​​ மனம் வெறுத்துப்போய் இருக்கிறான்.​ என் மகனின் ஜாதகப்படி,​​ சனிப் பிடித்துள்ளதால்தான் இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஜோசியர் கூறுகிறார்.​ இது சரியா?​ எப்போது அவனுக்கு மீண்டும் நல்ல வேலை கிடைக்கும்?​ குழந்தைப் பாக்கியம் உண்டாகுமா?​ என் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?​ பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?
பெயர் வெளியிட விரும்பாத மணப்பாறை வாசகி.


​ ​ ​ ​ உங்கள் மகனுக்கு மேஷ ராசி.​ பரணி நட்சத்திரம்.​ அவருக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதத்திலிருந்து சனி பகவான் பலம் பெற்ற சுப ஸ்தானமான ஆறாம் இல்லத்திற்குப் பெயர்ச்சி ஆகியுள்ளார்.​ இதை எந்த ஜோசியரும் குறை என்று கூறமாட்டார்.​ மேலும் கஷ்டம் வந்துவிட்டால் சனி பகவானின் மேல் பழி போடக்கூடாது.​ நாம் அனைவரும் நவ ​(ஒன்பது)​ கிரகங்களின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளோம்.​ சனி பகவானை ஜோதிடத்தில் "நீதிமான்' என்று கூறுகிறார்கள்.​ எப்படி நீதிபதி தவறு செய்தவர்களுக்கு அவர்களின் குற்றங்களுக்கு ஏற்ப தண்டனை வழங்குகிறாரோ அதேபோல் சனி பகவானும் நம் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவர் தசையிலோ,​​ புக்தியிலோ,​​ ஏழரை நாட்டுச் சனியிலோ,​​ அஷ்டம மற்றும் அர்தாஷ்டம சனிக் காலங்களிலோ,​​ நன்மை -​ தீமைகளை வழங்கி சூழ்நிலைகளை மாற்றி அமைத்து நம்மைச் செம்மைப்படுத்துகிறார்.​ இத்தகைய காலகட்டங்களில் ஏற்படும் அனுகூல/​ பிரதிகூல சூழ்நிலைகளை நாம் ஏற்றுக் கொண்டு நம் முயற்சிகளை வேறு திசையில் செலுத்த ​ வேண்டும்.​ நாம் இப்படித்தான் இந்தப் பாதையில்தான் செல்ல வேண்டும்,​​ மாற்றுப் பாதையில் செல்லக்கூடாது என்று பிடிவாதமாக இருந்து,​​ நம்மை மாற்று வழியில் திருப்பிச் செலுத்த அவர் செய்யும் வேலைகளை தண்டனையாக ​ நினைக்காமல் இருக்க வேண்டும்.​ அத்தகைய நிதர்சனத்தை உணர்ந்த பிறகு நாம் செய்யும் மாற்று முயற்சிகளுக்கு சனி பகவான் உறுதுணையாக நிற்கிறார்.​ பலருக்கு ஏழரை நாட்டுச் சனிக் காலத்தில் திருமணம்,​​ குழந்தைப்பேறு,​​ ஸ்திரச் சொத்து வாங்குதல்,​​ பதவி உயர்வு,​​ முக்கியமாக வெளிநாட்டுப் பயணம் ஆகியவை கிடைப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
​ ​ ​ ஏன்,​​ பலர் சட்டமன்ற உறுப்பினர்,​​ பாராளுமன்ற உறுப்பினர்,​​ அமைச்சர் போன்ற பதவிகளையும் அடைகின்றனர்.​ எவரும் தமக்கு இது போன்ற நன்மைகள் ஏழரை நாட்டுச் சனியில் நடக்கும் போது சனி பகவானைப் புகழ்வதில்லை.​ மேலும் வெளியிலும் சொல்வதில்லை;​ அவரை பூஜிப்பதும் இல்லை.​ அதேநேரம் சிறிது கஷ்டம் வந்தால்கூட அவரை ஏசத் தொடங்குகிறார்கள்.​ இச்சமயங்களில் அவரை எள் தீபமேற்றி வழிபட்டு வர வேண்டும்.​ "மக்கள் சேவையே மகேசன் சேவை,​​ ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்கிற வழக்குகளுக்கு ஏற்ப,​​ ஏழை எளிய மக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.​ மேலும் தன்னலமற்ற தொண்டாற்றுபவர்களையும் சனி பகவானுக்குப் பிடிக்கும்.​ அவர் நலம் புரிவதிலும்,​​ தண்டனை கொடுப்பதிலும் பாரபட்சம் காட்டாதவர்.​ "கடவுள் இல்லை' என்று நாத்திக வாதம் பேசுபவர்கள் ஏனைய கடவுள்களை அவமதித்து நடந்து கொண்டாலும் சனி பகவானை ஏசிப் பேசத் துணிவதில்லை என்பது கவனிக்கத் தக்கது.​ "நம்மை எவரும் தண்டிக்க முடியாது' என்று இறுமாப்பு கொண்டு பஞ்சமஹா பாதகச் செயல்களில் ஈடுபடுபவர்களை தன் ஆதிக்கக் காலத்தில் இடறி விழவைத்து,​​ இருட்டில் செய்த தவறுகளுக்கெல்லாம் வெட்ட வெளிச்சத்தில் தண்டனை வழங்குகிறார் என்றால் அவருக்கு நிகர் அவரே.
​ ​ ​ நிற்க...​ உங்கள் மகனுக்கு பணம் புழங்கும் இடங்களான வங்கி,​​ காப்பீடு போன்ற துறைகளில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.​ அவரை அந்தத் துறைகளில் கணினி வேலைக்கோ,​​ அதிகாரி பணிக்கோ முயற்சி செய்யச் சொல்லவும்.​ அவருக்கு சனி பகவான் ஆறாம் இடத்தில் சுப பலமாக இருப்பதால் நல்ல இடத்தில் உத்யோகமும்,​​ மனைவிக்கு மழலைப் பாக்கியமும் விரைவில் கிடைக்கும்.​ தம்பதிகளுக்கு இடையே பிரிவினை ஏற்பட வாய்ப்பில்லை.​ தாய் ஸ்தானாதிபதி பூர்வபுண்ய ஸ்தானத்தில் அமர்ந்து தன் ஸ்தானத்தைப் பார்வை செய்வதால்,​​ உங்களின் உடல்நலமும் மேற்கூறிய காலகட்டத்திற்குப் பிறகு சீரடையும்.​ அவருக்கும்,​​ உங்களுக்கும் தீர்க்காயுள் ஜாதகமே;​ கவலை வேண்டாம்.​ அரை குறையாக எதையாவது கேட்டு மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம்.​ ஒளிமயமான எதிர்காலம் உங்கள் குடும்பத்தை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது.​ உற்சாகத்துடன் இருங்கள்!​​

குழந்தைகளால் அனுகூலம்
​ ​ ​ ​ எனது கணவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டார்.​ தற்போது அறுவைச் சிகிச்சை முடிந்து வீட்டில் இருக்கிறார்.​ இந்நிலையில் அவரது உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?​ நான் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறேன்.​ சொந்த வீடு கட்டும் வாய்ப்பு உண்டா?​ எனது கணவரின் பூர்வீகச் சொத்து கிடைக்குமா?
​ ​ ​ ​ இது ஒருபுறமிருக்க,​​ எனது மூத்த மகன் பி.காம் முடித்துவிட்டு சி.ஏ.​ படித்துக்கொண்டிருக்கிறான்.​ அவன் நல்ல முறையில் படித்து முடிப்பானா?​ நல்ல உத்யோகம் கிடைக்குமா?​ திருமணம் எப்போது நடக்கும்?
​ ​ ​ ​ என் இரண்டாவது மகன் ப்ளஸ் 2 படித்துக்கொண்டிருக்கிறான்.​ அவன் பி.இ.​ படிக்கும் வாய்ப்பு உண்டா?​ எனது உடல் ஆரோக்கியம் எவ்வாறு அமையும்?​ மகன்கள் இருவரும் எங்களின் கடைசிக் காலத்தில் எங்களுக்கு ஆதரவாக இருப்பார்களா?
வி.கே.பி.,​​ மயிலை.


​ ​ ​ ​ உங்கள் கணவரின் உடல்நலம் சீராகவே இருக்கும்.​ அவருக்குத் தற்சமயம் பூர்வபுண்ய ஸ்தானாதிபதியின் தசை நடக்கிறது.​ உங்கள் குடும்பச் சொத்தின் பாகப் பிரிவினை உண்டாக சற்று தாமதமாகும்.​ அதேநேரம் உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் வருமானத்தில் வீடு கட்ட வாய்ப்பு உண்டாகும்.
​ ​ ​ உங்களுக்கு தற்சமயம் உச்சம் பெற்ற பஞ்சமாதிபதி தசையின் பின்பகுதி நடக்கிறது.​ இது 2014ஆம் ஆண்டு வரை தொடரும்.​ இக்காலகட்டம் சிறப்புகளைக் கொண்டு ​ வந்து சேர்க்கும்.​ மற்றபடி பாக்யாதிபதி திக் பலம் பெற்றுள்ளதால் எதிர்காலம்,​​ ஆயுள் பற்றிய கவலை வேண்டாம்.​ உங்களுக்கு புத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்றுக் காணப்படுவதால் குழந்தைகளால் இறுதி வரை அனுகூலம் ஏற்படும்.
​ ​ ​ ​ உங்கள் மூத்த மகனுக்கு கல்வி ஸ்தானாதிபதி சற்று பலம் குறைந்து காணப்படுகிறார்.​ அதனால் அவரை காஸ்ட் அக்கௌண்டிங் படிப்பையும் தொடரச் சொல்லவும்.​ மற்றபடி மேலாண்மைத் துறையில் மார்க்கெட்டிங் பிரிவு ஏற்றது.​ 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு,​​ நல்ல உத்தியோகம் கிடைக்கும்.​ வருமானமும் நன்றாக இருக்கும்.​ அவருக்காக பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்கையம்மனை வழிபட்டு வரவும்.​ அவருடைய உடல் ஆரோக்கியம் நன்றாகவே அமையும்.​ மேற்கூறிய கால கட்டத்திற்குப் பிறகு திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள்.
​ ​ ​ ​ உங்கள் இரண்டாம் மகனுக்கு பொறியியல் படிப்பில் கம்யூனிகேஷன்,​​ கணினித் துறைகள் ஏற்றவை.​ இன்ஸ்ட்ரூமென்டேஷன் படிப்பும் படிக்கலாம்.​ மற்றபடி படிப்பை முடித்ததும் வேலை கிடைத்துவிடும்.
​ ​ ​ ​ இரண்டு மகன்களின் எதிர்காலமும் சிறப்பாக அமையும்.​ உங்கள் குடும்ப முன்னேற்றத்திற்காக சனிக்கிழமைகளில் சனி பகவானையும்,​​ பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.

சித்திரையால் தந்தைக்கு ஆபத்தா?
​ ​ ​ ​ என் இரண்டாவது மகன் பொறியியல் துறையில் டெலிகம்யூனிகேஷன் இரண்டாம் வருடம் படிக்கிறான்.​ அவன் படிப்பை நல்ல முறையில் முடிப்பானா?​ நல்ல வேலை கிடைக்குமா?​ மேலும் எனது மகனுக்கு கடவுள் பக்தி இல்லை.​ முரட்டுச் சுபாவத்துடன் இருக்கிறான்.​ அவனது போக்கில் எப்போது மாற்றம் ஏற்படும்?​ சிலர்,​​ "அவன் சித்திரை மாதத்தில் பிறந்ததால் தந்தைக்குப் பாதிப்பு ஏற்படும்' என்கிறார்களே...​ சரியா?
வி.​ மகேஸ்வரி,​​ பெங்களூர்.


​ ​ ​ ​ ​ உங்கள் மகனுக்கு அவர் படிக்கும் டெலிகம்யூனிகேஷன் துறை ஏற்றதாகவே அமைந்துள்ளதால்,​​ அதில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெறுவார்.​ படித்து முடித்தவுடன் மேற்படிப்பை,​​ பகுதி நேரமாக மேலாண்மைத் துறையில் மார்க்கெட்டிங்,​​ மனித வளம் பிரிவில் படிக்க வைக்கலாம்.​ வேலைக்குச் சென்றுகொண்டே படிக்கலாம்.​ உங்கள் மகனுடைய முரட்டுச் சுபாவம் குறைய,​​ பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும்,​​ தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.​ இதனால் கடவுள் பக்தியும் உண்டாகும்.​ மற்றபடி சித்திரை மாதத்தில் பிறந்ததால் தந்தைக்கு ஆகாது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சிவபெருமானை வழிபடவும்!​ ​ ​
​ ​ ​ ​ எனக்குத் திருமணம் ஆகி ஒன்பது வருடங்கள் ஆகின்றன.​ இதுவரை மழலைச் செல்வம் இல்லை.​ அனைத்துப் பரிகாரங்களையும் செய்துவிட்டோம்.​ எப்போது எனக்கு குழந்தை பிறக்கும்?
எஸ்.​ ஹரிகரன்,​​ சென்னை-99.


​ ​ ​ ​ உங்கள் மற்றும் உங்கள் மனைவியின் ஜாதகப்படி,​​ இந்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு கருத்தரிக்க வாய்ப்பு உண்டாகும்.​ அதுவரை பிரதி வியாழக் கிழமைகளில் குரு பகவானையும்,​​ தட்சிணாமூர்த்தியையும்,​​ பிரதி ​{ஞாயிற்றுக் கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.

சனி பகவானுக்கு தீபம் ஏற்றவும்!​ ​ ​
​ ​ ​ ​ என்னுடைய பிறந்த நட்சத்திரம் ஆயில்யம் என்று உள்ளது.​ ஆனால் சிலர் மகம் நட்சத்திரம்,​​ 1ஆம் பாதம் என்கிறார்கள்.​ இதில் எது சரி?
வெ.​ சங்கரநாராயணன்,​​ திருநெல்வேலி-1.


​ ​ ​ உங்களுக்கு மகம் நட்சத்திரம்,​​ 1ஆம் பாதம் ​(சிம்ம ராசி)​ என்பதே சரி.​ தற்சமயம் பாக்யாதிபதியான குரு பகவானின் தசையில் களத்ர ஆயுள் ஸ்தானாதிபதியான சனி பகவானின் புக்தி 22.6.2010 வரை நடக்கும்.​ இக்காலகட்டத்தில் இன்பங்கள் ஏற்பட சனி பகவானை சனிக்கிழமைகளில் தீபமேற்றி வழிபட்டு வரவும்.

பெரிய வித்தியாசம் இல்லை!​​ ​ ​ ​
​ ​ ​ ​ எனது மகனின் ஜாதகம் முதலில் பாம்பு பஞ்சாங்கப்படி எழுதப்பட்டது.​ பின்னர் கம்ப்யூட்டரில் திருக்கணிதப்படி கணிக்கப்பட்டது.​ இதில் அம்ச கட்டங்களில் கிரக நிலைகள் மாறி வருவதோடு,​​ தசா இருப்புகளும் வித்தியாசப்படுகின்றன.​ இந்நிலையில் எந்த ஜாதகம் சரி?​ ​ இது ஒருபுறமிருக்க,​​ எனது மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?​ எப்படிப்பட்ட சம்பந்தம் ஏற்படும்?
​ ​ ​ ​ லக்னத்துக்கு 7ல் செவ்வாய்,​​ சனி ​(கடக ராசியில்)​ உள்ளது.​ இதனால் ஒரு ஜோதிடர் "செவ்வாய் தோஷம் இருக்கிறது' என்கிறார்.​ மற்றொருவர் "பரிகார செவ்வாய்' என்கிறார்.​ இதில் எது சரி?
கே.​ ரத்தினம்,​​ தாத்தையங்கார்பேட்டை.


​ ​ ​ ​ உங்கள் மகனுக்கு கம்ப்யூட்டரில் திருக்கணித முறையில் கணிக்கப்பட்ட ஜாதகத்தையே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.​ அதே சமயம்,​​ உங்கள் ஜாதகம் வாக்கிய பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டதற்கும்,​​ திருக்கணித முறையில் கணிக்கப்பட்டதற்கும் பெரிய வித்தியாசம் ஏற்படவில்லை.​ அதனால் கவலைப்பட எதுவும் தேவையில்லை.​ இதை ​ ஜோசியர்கள் புரிந்துகொண்டு விடுவார்கள்.​ உங்கள் மகனின் ஜாதகப்படி செவ்வாய்பகவான் சனிபகவானுடன் இணைந்திருப்பதாலும்,​​ அங்கு அவர் நீச்சபங்கராஜயோகம் பெறுவதாலும் செவ்வாய் தோஷம் இல்லை.​ அவருக்கு களத்ரஸ்தானாதிபதியை தர்ம கர்மாதிபதிகள் பார்ப்பது சிறப்பு.​ தென்கிழக்கு அல்லது வடக்கு திசையிலிருந்து சம்பந்தம் ஏற்படும்.​ படித்து,​​ வேலைக்குச் செல்லாத பெண் மனைவியாக அமைவார்.​ இந்த ஆண்டு இறுதிக்குள் திருமண முயற்சிகள் வெற்றி பெறும்.​ உங்கள் மகனின் எதிர்காலம் பிரகாசமாகவே அமையும்.

மறுமணம் நடக்கும்!​ ​
​ ​ ​ ​ எனக்கு 31 வயது ஆகிறது.​ 2002ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது.​ எனது கணவர் உடல்நிலை சரியில்லாமல் 2008ஆம் ஆண்டு காலமாகிவிட்டார்.​ இந்நிலையில் எனக்கு மறுமணம் நடக்குமா?​ குழந்தைப் பாக்கியம் உண்டா?​ அரசு வேலை கிடைக்குமா?​ நான் திங்கள் கிழமைகளில் சோமவார விரதம் இருக்கிறேன்.​ வெள்ளிக்கிழமைகளில் காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருகிறேன்.​ வேறு ஏதேனும் பரிகாரம் செய்யவேண்டுமா?
பெயர் வெளியிட விரும்பாத சென்னை வாசகி.


​ ​ ​ ​ உங்கள் ஜாதகப்படி லக்னாதிபதி நீச்சபங்கராஜயோகம் பெற்றிருக்கிறார்.​ உங்களுக்கு அரசு உத்யோகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.​ இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு,​​ மறுமணம் நடக்கும்.​ படித்த,​​ நல்ல வேலையில் உள்ள வரன் அமைவார்.​ புத்திர ஸ்தானாதிபதி வர்கோத்தாம்சத்தில் அமர்ந்துள்ளதால் குழந்தைப் பாக்கியம் உள்ளது.​ நீங்கள் செய்து வரும் வழிபாடுகளை தொடரவும்.​ அவை சரியாக உள்ளதால் வேறு பரிகாரங்கள் தேவையில்லை.

வெளிநாட்டு வாழ்க்கை!​ ​
​ ​ ​ ​ எனது மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?​ எப்படிப்பட்ட ஜாதக அமைப்புள்ள வரனைப் பார்க்க வேண்டும்?​ தற்போது எனது மகன் அமெரிக்காவில் பணிபுரிகிறான்.​ அவன் இந்தியாவிற்கு வந்து பணிபுரியும் வாய்ப்பு உள்ளதா?​ பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
ஏ.​ நாராயணமூர்த்தி,​​ சென்னை.


​ ​ ​ உங்கள் மகனின் ஜாதகப்படி லக்னத்தில் பஞ்சமாதிபதி அமர்ந்திருப்பது சிறப்பு.​ அதேசமயம் அவருடன் ராகு பகவான் இணைந்திருப்பதற்கு ஏற்ற தோஷ சாம்யம் பார்த்துச் சேர்க்க வேண்டியது அவசியம்.​ மற்றபடி களத்ரஸ்தானாதிபதி சுபமாக அமர்ந்துள்ளதால்,​​ மணவாழ்க்கை நல்ல முறையில் அமையும்.​ வரும் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு திருமணம் கைகூடும்.​ உங்கள் மகன் வெளிநாட்டிலேயே அதிக ஆண்டுகள் வாழ வாய்ப்பு உள்ளது.​ பரிகாரம் எதுவும் தேவையில்லை.

மனநலம் சீராகும்!
​ ​ ​ ​ என்னுடைய மகளுக்கு 29 வயதாகிறது.​ அவளுக்கு ஏற்பட்டுள்ள மனநோய் எப்போது குணமாகும்?​ திருமணம் எப்போது நடக்கும்?​ ​
எம்.டி.​ நடராஜன்,​​ சென்னை.


​ ​ ​ ​ உங்கள் மகளின் ஜாதகப்படி லக்னத்திற்கும்,​​ சுக ஸ்தானத்திற்கும் ஏற்ற சமதோஷம் பார்த்து ஜாதகம் சேர்க்க வேண்டும்.​ இல்லையேல் மணவாழ்க்கையில் குழப்பங்கள் உண்டாகலாம்.​ மற்றபடி அவரின் மனநலம் 2011ஆம் ஆண்டு,​​ ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு சீராகும்.​ அதன்பின் நல்ல இடத்தில் திருமணம் கைகூடும்.​ பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும்,​​ தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
​ ​ ​ ​ ​
அன்னிய சம்பந்தம் அமையும்!
​ ​ ​ ​ ​ எனது மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா?​ அவனுக்குத் திருமணம் நடப்பதில் கால தாமதம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.​ எப்போது திருமணம் ​ நடைபெறும்?​ எப்படிப்பட்ட சம்பந்தம் ஏற்படும்?​ எனது மகனின் உடல் ஆரோக்கியம் எவ்வாறு அமையும்?
பெயர் வெளியிட விரும்பாத தஞ்சாவூர் வாசகர்.


​ ​ ​ ​ உங்கள் மகனுக்கு அரசு சம்பந்தப்பட்ட உத்தியோகம் கிடைக்கும்.​ அதேநேரம் அவருக்கு களத்ர ஸ்தானாதிபதி அசுப கிரகத்துடன் இணைந்து மறைவு பெற்றிருப்பதால் திருமணம் தாமதமாகிறது.​ ஆனாலும் கவலைப்பட வேண்டாம்;​ இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும்.​ அன்னிய சம்பந்தத்தில்,​​ உத்தியோகம் செல்லும் பெண் மனைவியாக அமைவார்.​ மற்றபடி உங்கள் மகனின் உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும்.​ ​
​ ​ ​ ​ ​
இரண்டாம் குழந்தை பிறக்கும்!​ ​
​ ​ ​ ​ எனது மூத்த மகளுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றன.​ தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது.​ இரண்டாவது குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதா?​ குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமா?​ பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
பெயர் வெளியிட விரும்பாத இலங்கை,​​
கொழும்பு வாசகர்.


​ ​ ​ ​ ​ உங்கள் மகளுக்கு 2011ஆம் ஆண்டு இரண்டாம் குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டாகும்.​ அதுவரை பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும்.​ மற்றபடி குடும்ப வாழ்க்கை சீராகவே செல்லும்.

உத்தியோகம் பார்க்கும் மனைவி!
​ ​ ​ ​ எனது பேரனுக்கு 26 வயது ஆகிறது.​ ஒரு வங்கியில் நல்ல சம்பளத்தில் பணிபுரிகிறான்.​ அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?
கே.வி.​ ராமன்,​​ சென்னை-53.

​ ​ ​
​ ​ ​ ​ உங்கள் பேரனுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் நல்ல இடத்தில் திருமணம் கைகூடும்.​ படித்த,​​ உத்யோகம் பார்க்கும் பெண் மனைவியாக அமைவார்.​ மற்றபடி களத்ர ஸ்தானத்திற்கு ஏற்ற சம தோஷம் பார்த்துச் சேர்க்கவும்.

தந்தையின் உத்தியோகம்!
​ ​ ​ ​ எனது தந்தை தபால் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இறைவனடி சேர்ந்துவிட்டார்.​ எனக்கு அந்த வேலை கிடைக்குமா?​ என்னுடைய எதிர்காலம் எவ்வாறு அமையும்?
ம.​ மயிலப்பன்,​​ மதுரை.


​ ​ ​ ​ உங்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு,​​ உங்கள் தந்தையின் அரசு உத்தியோகம் கிடைக்க வாய்ப்பு உண்டாகும்.​ தொழில் ஸ்தானத்தில் பாக்யாதிபதி அமர்ந்திருப்பதால் நல்ல எதிர்காலம் உள்ளது.​ பிரதி தினமும் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தனியார் துறையில் வேலை ​
​ ​ ​ ​ எனது மகனுக்கு 30 வயது ஆகிறது.​ எம்.எஸ்.ஸி.,​​ எம்.ஃபில்.​ முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தான்.​ இப்போது அந்த வேலையிலிருந்து நின்றுவிட்டான்.​ தொடர்ந்து பி.எட்.​ படித்துவிட்டு வீட்டில் இருக்கிறான்.​ ​ ​ அவனுக்கு ஆசிரியர் வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டா?​ மேலும் திருமணம் எப்போது நடைபெறும்?
பெயர் வெளியிட விரும்பாத வேலூர் மாவட்ட வாசகி.


​ ​ ​ ​ உங்கள் மகனின் ஜாதகப்படி களத்ர ஸ்தானாதிபதி பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்துடன் இணைந்திருப்பதும்,​​ பார்வை செய்வதும் குறை.​ இதற்கேற்ற சம தோஷம் பார்த்து ஜாதகம் சேர்க்க வேண்டியது அவசியம்.​ உங்கள் மகனை உடனடியாக கணினித்துறையில் உத்தியோகத்திற்கு முயற்சி செய்யச் சொல்லுங்கள்;​ தனியார் துறையில் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு.​ இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு திருமணம் நடக்கும்.​ களத்ர ஸ்தானத்தின் மீது குரு பகவானின் பார்வை படிவதால் உங்கள் மகனின் தகுதிக்கேற்ற இடத்திலிருந்து பெண் அமையும்.
​ ​ ​ ​
திருமணம் நடக்கும்!​ ​ ​ ​
​ ​ ​ ​ ​ நான் எனது திருமணத்திற்காகக் கடந்த ஆறு வருடங்களாக முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.​ ஆனால் ஏதும் பலனில்லை.​ திருமணஞ்சேரி,​​ கொடுமுடி,​​ ​ ஆலங்குடி,​​ புதன் ஸ்தலம்,​​ சூரியனார் கோயில் ஆகிய ஸ்தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்துள்ளேன்.​ வேறு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?​​ ​ ​ எனக்குத் திருமணம் ஆகாது என்றால் எனது தம்பியின் திருமண முயற்சிகளைத் தொடங்கலாமா?​ இது ஒருபுறமிருக்க,​​ நான் எந்தத் தொழில் செய்தால் முன்னேற்றம் ஏற்படும்?
ரவி,​​ திருப்பூர்.


​ ​ ​ உங்களுக்கு இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் திருமண முயற்சிகள் வெற்றி பெறும்.​ கணினி,​​ சிமெண்ட்,​​ ஸ்டேஷனரி போன்ற துறைகளில் ஈடுபடலாம்.​ ஜாதகப்படி களத்ரஸ்தானாதிபதி சுப பலம் பெற்றுள்ளதால் நல்ல இடத்தில் திருமணம் கைகூடும்.​ உங்கள் திருமணத்திற்குப் பிறகு உங்கள் தம்பிக்கு திருமணம் செய்யலாம்.​ ​

ஏப்ரலுக்குப் பின்...
​ ​ ​ ​ எனது மகனுக்கு 32 வயது ஆகிறது.​ எப்போது திருமணம் நடைபெறும்?​ பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
கே.​ சுந்தரேசன்,​​ சென்னை-11.


​​ ​ ​ ​ உங்கள் மகனுக்கு இந்த ஆண்டில்,​​ ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு திருமணம் கைகூடும்.​ களத்ர ஸ்தானத்திற்கு ஏற்ற சமதோஷம் பார்த்துச் சேர்க்க வேண்டும்.​ பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும்,​​ தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

மனதுக்குப் பிடித்த வரன்!
​ ​ ​ ​ எனது மகள் தற்போது லண்டனில் பணிபுரிகிறார்.​ அவருக்கு எப்போது திருமணம் நடக்கும்?​ அவரது மனதிற்குப் பிடித்த வரன் அமையுமா?
பாலு,​​ நங்கநல்லூர்,​​ சென்னை.


​ ​ ​ ​ ​ உங்கள் மகளின் ஜாதகப்படி களத்ர ஸ்தானாதிபதி பூர்வபுண்ய பஞ்சம ஸ்தானாதிபதியின் சாரத்தில் அமர்ந்திருப்பதால் நல்ல இடத்தில் திருமணம் கைகூடும்.​ மேலும் தற்சமயம் குடும்ப ஸ்தானாதிபதியின் தசையில் பாக்யாதிபதியின் புக்தி நடக்கிறது.​ இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் முயற்சிகள் வெற்றி பெறும்.​ அவரின் மனதுக்குப் பிடித்தபடியே வரன் அமையும்.​ எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கும்.

ரகசியங்கள் பொதிந்த திருமந்திரம்!​ ​
​ ​ ​ ​ நான் பட்டப்படிப்பு முடித்துள்ளேன்.​ தற்போது ஒரு தனியார் கல்லூரியில் நூலகராகப் பணிபுரிகிறேன்.​ ஆரம்பத்தில் அங்கே நிர்வாகியாகப் பணிபுரிந்த நான்,​​ இப்போது நூலகராகப் பணியிறக்கம் செய்யப்பட்டுள்ளேன்.​ மிகக் குறைந்த சம்பளமே வாங்குகிறேன்.​ இது வரை சேமிப்பு என்பதே இல்லை.​ இந்நிலையில் நல்ல வருமானத்துடன் நிலையான உத்தியோகம் கிடைக்குமா?​ சொந்தத் தொழில் அமையுமா?​​ ​ ​ இது ஒருபுறமிருக்க,​​ எனது மனைவிக்கு கரு சிதைந்து விட்டது.​ அவள் மீண்டும் கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டா?​ எனக்கு வீடு மற்றும் வாகன வசதி கிடைக்குமா?​ ​ ​ ஆன்மீகப் பயணம் செல்வேனா?
ஆர்.​ சுரேஷ்குமார்,​​ சரவணம்பட்டி.


​ ​ ​ ​ ​ உங்கள் ஜாதகப்படி லக்னாதிபதி,​​ பூர்வபுண்ய ஸ்தானாதிபதி மற்றும் குடும்பாதிபதி ஆகியோர் ஆட்சி பெற்றுள்ளார்கள்.​ மேலும் தொழில் ஸ்தானாதிபதி லக்னத்திலும்,​​ பாக்யாதிபதி தொழில் ஸ்தானத்திலும் அமர்ந்திருப்பதும் உத்யோகத்திற்கும்,​​ தொழிலுக்கும் சிறப்பான அமைப்பாகும்.​ மேலும் களத்ரஸ்தானாதிபதி குருபகவானின் பார்வையைப் பெறுகிறார்.​ இதனால் வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும்.​ இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து சுயசாரத்தில்,​​ தொழில் ஸ்தானத்தில் பலமாக அமர்ந்துள்ள பாக்யாதிபதியின் தசை நடக்கத் தொடங்கும்.​ இதிலிருந்து அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்;​ பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
​ ​ ​ ​ இந்த ஆண்டு இறுதிக்குள் உங்கள் மனைவி மறுபடி கருத்தரித்து நல்ல முறையில் பிள்ளையைப் பெறும் வாய்ப்பு உண்டாகும்.​ உங்கள் மனைவிக்கு லக்னாதிபதி பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும்,​​ பாக்யாதிபதி களத்ர ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும்,​​ பூர்வபுண்ய ஸ்தானாதிபதி குருபகவானுடன் இணைந்திருப்பதும்,​​ தொழில் ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதும் சிறப்பாகும்.​ இதனால் அவரின் ஜாதகமும் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும்.​ கஜகேசரி யோகம் இருப்பதாலும்,​​ லக்னாதிபதி ஆத்மகாரகனாகி லக்னத்திலேயே ஆட்சி பெற்றிருப்பதாலும்,​​ "பிரபஞ்சத்தின் ஆசான்' என்றழைக்கப்படுகிற சனி பகவானை குருபகவான் பார்வை செய்வதாலும்,​​ உங்களுக்கு குருவருளும்,​​ திருவருளும் ஒன்றாகக் கிடைக்கப்பெறும்.​ நீங்கள் விரும்பும் வீடு,​​ வாகனம் மற்றும் ஆன்மீகப் பயணம் அனைத்தும் சித்திக்கும்.​ ராகு தசையில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும்.​ குறிப்பாக ஆன்மீக தர்ம காரியங்களில் உங்களை இறைவன் பயன்படுத்திக் கொள்வார்.​ அரிதான வேத-வேதாந்த ரகசியங்கள் பொதிந்து கிடக்கும் திருமூல நாயனாரின் திருமந்திரத்தை நல்ல முறையில் படித்து மக்களுக்கு விளங்க வைக்கும் முயற்சியில் ஈடுபடலாம்.
Comments

Post your comments *
Email *
Name *
Verification Code *
Enter numbers shown in image *

Note: Comments may be moderated by our editors.