09 Feb 2010 08:21:14 AM IST

அரசுக் கல்லூரி கட்டடப் பணிகள்:​ எம்எல்ஏ ஆய்வு 

குளித்தலை,​​ பிப்.8:​ குளித்தலை அரசு கலைக் கல்லூரி கட்டடப் பணிகளை குளித்தலை ​
சட்டப்பேரவை உறுப்பினர் இரா.​ மாணிக்கம் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு ​செய்தார்.​ (படம்)
​ ​ ​ கரூர் மாவட்டம்,​​ குளித்தலையில் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி ​(சட்டமன்ற பொன்விழா)​ கடந்த 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டது.​ கல்லூரிக்கு தேவையான கட்டட வசதிகள் இல்லாததால்,​​ குளித்தலை காவிரி நகரிலுள்ள அண்ணா சமுதாய மன்றத்தில் தாற்காலிகமாக வகுப்புகள் நடைபெற்று வந்தன.
​ ​ இதையடுத்து,​​ கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட அய்யர்மலையில் புதிய கட்டடம் கட்டும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என குளித்தலை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.​ இதைத்தொடர்ந்து,​​ அய்யர்மலையில் 8.980 ஹெக்டேர் நிலத்தில் ரூ.​ 2.84 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் ​
அண்மையில் தொடங்கப்பட்டன.​ ​ ​
​ ​ ​ ​ தற்போது,​​ கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் தரைத்தளத்தில் 12 வகுப்பறைகள்,​​ 1 முதல்வர் அறை,​​ 1 அலுவலக அறை,​​ துறைத்தலைவர்கள் அறைகள்,​​ ஆய்வக அறை,​​ கணினி அறை,​​ நூலக அறை,​​ பேராசிரியர்கள் ஓய்வு அறை ஆகியவற்றை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.​ ​ ​
​ ​ ​ இந்தப் பணிகளை குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் இரா.மாணிக்கம் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.​ அப்போது அவர் கூறுகையில்,​​ தற்போது நடைபெற்று வரும் கட்டட பணிகள் விரைவில் நிறைவுப் பெறும்.​ வரும் கல்வியாண்டு முதல் புதிய கட்டடத்தில் வகுப்புகள் நடைபெறும் என்றார் அவர்.​ ​
​ ​ ​ ​ எம்எல்ஏவின் இந்த ஆய்வின் போது திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏ.சிவராமன்,​​ ஒன்றியக்குழு துணைத் தலைவர் மு.கந்தசாமி,​​ குழு உறுப்பினர் செல்வம்,​​ சத்தியமங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் எம்.​ பிச்சை ஆகியோர் உடனிருந்தனர்.

© Copyright 2008 Dinamani