11 Mar 2010 10:31:25 AM IST
கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டம்
பழனி மார்ச் 10: பழனியை அடுத்த தாளையூத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தாளையூத்தில் பெரிய மொட்டனூத்து சாலையில் பாலம் கட்டி சாக்கடை நீரை வெளியேற்ற வேண்டும். அருந்ததிய மக்கள் மயானத்துக்கு தார்ச் சாலை அமைக்க வேண்டும்.
மானூரில் இருந்து வரும் குடிநீர் விநியோகத்தை முறையாக பராமரிக்க வேண்டும். ரேஷன் கடை முறைகேடுகளைத் தடுக்கவும் முறையாக நடவடிக்கை எடுக்க கோரியும் கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஏரியா கமிட்டி உறுப்பினர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். மார்க்சிய கம்யூ. சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பாலபாரதி சிறப்புரை நிகழ்த்தினார். பழனி ஏரியா கமிட்டி செயலர் அருள்செல்வன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, மாயவன், ஏரியா கமிட்டி உறுப்பினர்கள் கார்த்திகேயன், ராமசாமி, கிளைச் செயலர்கள் வீராச்சாமி, கிருஷ்ணன், தெண்டபாணி மற்றும் மகுடீஸ்வரன் உள்ளிட்டோர் பேசினர்.