Wednesday, September 08, 2010 1:53 PM IST
Click
சென்னை
கட்டடங்களுக்கு திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம்

First Published : 30 Jul 2010 01:55:53 PM IST


காஞ்சிபுரம், ஜூலை 29: நான்கு குடியிருப்புகள் மற்றும் 4000 சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளே திட்ட அனுமதி வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

÷இது குறித்து மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சு.சிவராசு வெளியிட்ட அறிக்கை: வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் 2010-11-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை மீதான அறிவிப்புகளில் சென்னை நீங்கலாக மற்ற இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் திட்ட அனுமதி வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டது.

÷அதன்படி, நான்கு குடியிருப்புகள் அல்லது 4000 சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளே திட்ட அனுமதி வழங்கலாம். இக் கட்டங்கள் தரை மற்றும் இரண்டு தளங்களை கொண்ட கட்டடமாக இருக்க வேண்டும்.

÷மேலும் 2000 சதுர அடிக்குள் கட்டப்படும் வாகன நிறுத்துமிடத்துக்கான தரைதளம் மற்றும் முதல் தளம் கொண்ட வணிக கட்டடம் ஆகியவற்றுக்கும் உள்ளாட்சி அமைப்புகள் திட்ட அனுமதி வழங்கலாம் என்றார்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்