புதிய தமிழகம் கட்சிக் கூட்டம்
First Published : 30 Jul 2010 10:20:02 AM IST
Last Updated :
பரமக்குடி, ஜூலை 29: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் புதிய தமிழகம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, புதிய தமிழகம் கட்சியின் நகர் செயலர் எம். ஆதி தலைமை வகித்தார். இளைஞரணி நகர் செயலர் எம்.ஜி. சுரேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அ.தி.மு.க.வுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி அமைத்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் இணைந்து செயலாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்ட அதிமுக மாவட்டப் பொருளாளர் டாக்டர் எஸ். சுந்தர்ராஜன், நகர் செயலர் எம்.கே. ஜமால், பரமக்குடி தொகுதி கழகச் செயலர் ஆ. பாலுச்சாமி, மருத்துவ அணிச் செயலர் டாக்டர் எஸ். முத்தையா, எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலர் எம்.ஏ. முனியசாமி ஆகியோருக்கு சால்வை அணிவித்து கெüரவிக்கப்பட்டனர். இதில் ஏராளமான புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.