Wednesday, September 08, 2010 12:42 PM IST
Click
வேலூர்
மயானப் பாதை கோரி சடலத்துடன் சாலை மறியல்

First Published : 30 Jul 2010 12:50:18 PM IST


தருமபுரி, ஜூலை 29: தருமபுரி, கடத்தூர் அருகே மயனாப் பாதை கோரி சடலத்தை சாலையில் கிடத்தி இறந்தவரின் உறவினர்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

கடத்தூர், தேக்கல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராமலிங்கம் (42). இவர் புதன்கிழமை இறந்தார். இதையடுத்து, அவரது உடல் வியாழக்கிழமை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வழியில் புளியமரத்தின் கிளை தடங்கலாக இருந்ததால் ராமலிங்கத்தின் உறவினர்கள் மரக்கிளையை வெட்ட முயற்சித்தனராம்.

  அப்போது, புளியமரத்தின் உரிமையாளர் குமரேசன் மற்றும் அவரது உறவினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

  இதையடுத்து, ராமலிங்கத்தின் சடலத்தை தருமபுரி-பொம்மிடி சாலையில் கிடத்தி, தங்களுக்கு மயானப் பாதை வசதி வேண்டும், மயானத்துக்குச் செல்லும் வழியில் இடையூறாக இருக்கும் புளியமரத்தை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  சம்பவ இடத்துக்கு வந்த பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் ராமதுரைமுருகன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினார். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்