Friday, September 10, 2010 3:01 AM IST
Click
வேலூர்
ஆடு திருட்டு வழக்கு: இருவருக்கு சிறை

First Published : 30 Jul 2010 12:51:49 PM IST


அரூர், ஜூலை 29: கோட்டப்பட்டி அருகே ஆடு திருடிய வழக்கில் தொழிலாளிகள் இருவருக்கு தலா 2 மாதம் சிறை தண்டனை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

 கோட்டப்பட்டி அருகேயுள்ள பெரியப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் விவசாயி கருணாநிதி. இவரது ஆட்டுப் பட்டியில் இருந்த ஆடு ஒன்று திருட்டுப் போனது. இது குறித்து அவர் கடந்த 8.7.2010-ல் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் முனவர்பேக் வழக்குப் பதிந்து பெரியப்பட்டி புதூரைச் சேர்ந்த சென்னன் மகன் சேட்டு (40), அதே ஊரைச் சேர்ந்த வேடிபூசாரி மகன் கோவிந்தன் (37) ஆகியோரை கைது செய்தார். இவ்வழக்கு அரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.நாகராஜன், குற்றம்சாட்டப்பட்ட சேட்டு, கோவிந்தன் இருவருக்கும் தலா 2 மாத சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்